இங்குள்ள முத்துநாயகியம்மன் எட்டு கரங்களுடன் சூலாயுதம் ஏந்தி, இடது காலில் அசுரனை மிதித்தபடி சுயம்புவாக காட்சி அளிக்கின்றாள்.அம்பாள், எட்டு கரங்களுடன் சூலாயுதம் ஏந்தி, இடது காலில் அசுரனை மிதித்தபடி சுயம்புவாக தோன்றினாள். காலப்போக்கில், அம்மனுக்கு ஐந்து ஏக்கர் நிலப் பரப்பில், பெரிய கோயில் கட்டப்பட்டது. மூலவர் முத்துநாயகி அம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.
கோயிலின் பின்புறம் நான்கு ஏக்கர் நில பரப்பில் புனித தீர்த்தமான தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இந்த தெப்பத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.வரம் தரும் நாயகி: திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் குறிப்பிட்ட நாள் விரதமிருந்து, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்கினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
குடும்பக் கஷ்டம் நீங்க, தொழிலில் லாபம் கிடைக்க, தீவினைகளால் ஏற்படும் கஷ்டங்கள், நோய்கள் அகல, அம்மனுக்கு மல்லிகைப் பூ சாத்துகின்றனர். உற்சவ காலங்களில் அக்னிச்சட்டி, பால்குடம், பொங்கல் படைத்தல், மாவிளக்கு ஏற்றுதல் ஆகிய நேர்ச்கைள் நடக்கும். இப்பகுதியை சேர்ந்த பலருக்கு முத்து என்ற பெயர் இருக்கிறது. |