ஆதிசங்கரரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்விதமாக இக்கோயிலில் விநாயகர், சிவபெருமான், பார்வதி, சூரியன், மகாவிஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு கொடியில் இருமலர்கள் அசுரனை வதம் செய்த பாவம் நீங்க நிமிஷாம்பாள் சிவனை ஸ்தாபித்து வழிபட்டாள். அவர் மவுத்திகேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.
லிங்கத்தில் முகம் போன்ற கவசம் சாத்தப்பட்டுள்ளது. பிரதோஷவேளையில் மவுத்திகேஸ்வரரைத் தரிசித்தால் ஆயுள் அபிவிருத்தி உண்டாகும். சிவபெருமானின் வலப்புறத்தில் லட்சுமிநாராயணர் சந்நிதி உள்ளது. அன்பின் காரணமாக பூலோகத்திற்கு தனது சகோதரியைக் காண வந்த பெருமாள் இங்கே தங்கிவிட்டார்.
ஒரு கொடியில் பூத்த இருமலர்களான லட்சுமிநாராயணரையும், நிமிஷாம்பாளையும் தரிசித்தால் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். |