இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர். அம்பாள் மக்களை சோதிப்பாள், தன் பிள்ளைகள் சோதனையில் வெற்றி பெறுகிறார்களா என கவனிப்பாள். இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் 500 ஆண்டுகளுக்கு முன் மக்களை சோதித்தாள்.
முஸ்லிம் படையெடுப்பின் போது, தன் சிலைக்கு ஆபத்து வரச் செய்தாள். மக்களோ சிலையை பாதுகாத்து, அவள் வைத்த சோதனையில் வெற்றி பெற்றனர். இப்போது பராமரிப்பே இல்லாமல், கஷ்டப்படுவது போல நடிக்கிறாள்.தன்னை பாதுகாக்க யாராவது ஒருவர் முன் வருகிறார்களா என காத்துக் கொண்டிருக்கிறாள் இந்த ஆந்திரத்து ஆதிபராசக்தி. |