ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறாள். கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் உள்ள அம்மனை பார்க்கும் போது, அம்மனை பிரதிஷ்டை செய்த பின் கருவறை அமைத்திருக்க வேண்டும் என தோன்றுகிறது.ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறாள். பீடத்தின் மேல் வலது காலை தூக்கி வைத்து, இடது காலை மடக்கி, வலது கையில் கீழ் நோக்கிய சூலம் வைத்து காலுக்கடியில் அசுரனுடன் அருள்பாலிக்கிறாள்.
கொடி மர மண்டபத்தின் தென்மேற்கு முகமாக சிதைவுற்ற பிள்ளையார் அதிக சக்தியுடன் விளங்குகிறார். இதன் முன்பு அமர்ந்தபடிதான் பூஜாரிகள் நோயுற்ற குழந்தைகளுக்கு திருநீறு பூசி, அம்பாளின் அபிஷேக நீரை தெளிக்கிறார்கள். பிட்டாபுரத்து தேவிக்கு "பிட்டு' நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. |