இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.பொதுவாக ஆலயங்களில், துர்க்கையை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருளாட்சி புரிகிறாள். சங்கு, சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தரும் ராஜதுர்க்கையின் ஆற்றல் அளவிடற்கரியது.
ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை பக்தியோடும், பாசத்தோடும் வழிபட்டுச் சென்று அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் எழுதிய ரகுவம்ச காவியத்தின் மூலம் அறிய முடிகிறது. |