தைப்பொங்கல் விழாவின் ஓர் அங்கமாக அன்று காலை கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா.... எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வேண்டுதல் நிறைவேறிக் கொண்ட இளைஞர்கள் தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாக பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்கள்.ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர் என கூறப்படுகிறது. |