கேரளாவிலுள்ள அம்மன் கோயில்களில் கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை ஏற்றப்படும் கோயில் இது மட்டுமே. மார்கழி முதல் தேதியில் இருந்து 12 வரை நினைத்த காரியம் நடக்க அனுஷ்டிக்கப்படும் நோன்பிற்கு பெண்கள் இருமுடி கட்டி செல்வதால் இது "பெண்களின் சபரிமலை' என்றும் சிறப்பு பெறுகிறது.
மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில், பெண்களை சக்தி வடிவமாக பாவித்து, அவர்களின் பாதங்களைக் கழுவும் "நாரி பூஜை' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த சமயத்தில் பெண்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வருகின்றனர். இவ்வகையில் இது "பெண்களின் சபரிமலை' என்றும் சிறப்பு பெறுகிறது.
11ம் நாள் கலச அபிஷேகமும், 12ம் நாள் காவடி நிகழ்ச்சியும் நடக்கிறது.மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில், பெண்களை சக்தி வடிவமாக பாவித்து, அவர்களின் பாதங்களைக் கழுவும் "நாரி பூஜை' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. |