கேரளாவின் புகழ்பெற்ற சுயம்பு சரஸ்வதி கோயில் இது .தாமோதரன் நம்பூதிரிக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால், அவரது உறவினர்கள், அவர் பூஜித்த சரஸ்வதிக்கு எதிரில் மேற்கு நோக்கி ஒரு கல்லை பிரதிஷ்டை செய்து அதை சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். அதை மட்டுமே நாம் பார்க்க முடியும்.தாமோதரன் பூஜித்தசரஸ்வதியைச் சுற்றிலும் வெற்றிலை கொடிகள் சூழ்ந்துவிட்டது.
இதற்கு அடியில் மூகாம்பிகை கோயிலில் இருந்து, சரஸ்வதி எழுந்தருளி வந்த குடை இருக்கிறது. இதை பக்தர்கள் தரிசிக்கலாம். ஆனால், குழந்தை சரஸ்வதியைப் பார்க்க முடியாது."சரஸ்' என்றால் தண்ணீர் என்றும் "வதி'என்றால் "தேவி' என்றும் பொருள். இதனடிப்படையில் கோயிலை சுற்றிலும் குளம் அமைந்துஉள்ளது. சரஸ்வதி கோயில் அருகில் நம்பூதிரிகள் பூஜித்த பெருமாள் கோயிலும் உள்ளது. |