இங்குள்ள அம்மன் சுயம்புவாக தோன்றி குழந்தை வடிவில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.திருமணம் நிச்சயிக்கப் பட்டதும், திருமாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை அம்பாளின் திருவடியில் வைத்து திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்குகின்றனர். நிச்சயதார்த்தம் செய்வதற்கு இரு வீட்டாரும் இரு கூடைகளில் உப்பு, வெற்றிலை, பாக்கு வைத்து பூஜித்து, அவற்றை மூன்று முறை மாற்றிக் கொண்டு உறுதி செய்கின்றனர்.
திருவிழா காலங்களில், இங்குள்ள வாய்க்காலில் பசுமாட்டையும், கன்றையும் குளிப்பாட்டி, புதிய வஸ்திரங்கள், மாலைகள் அணிவித்து கோமாதா பூஜை செய்கின்றனர். பின்னர் பால் கறந்து அந்தப்பாலை குடத்தில் ஊற்றி, ஊர்வலமாக வருகின்றனர். அதுவே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியத்துக்கும் வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் தீபம் ஏற்றுகின்றனர். |