கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளை தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர்.
இக்கோயில் அமைக்கப்பட்ட நேரத்தில், கோயில் இருந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. கண்ணகியின் சிலை உக்கிரமாக இருந்ததால் இவ்வாறு நடப்பதாக மக்கள் நம்பினர். மன்னன் செண்பக பாண்டியன் இதுபற்றி ஆலோசித்தான்.சிவபெருமானே அவனது கனவில், அவ்விடத்தில் தனது தேவி பார்வதியின் சிலையை அமைக்கச் சொன்னதாகச் சொல்வதுண்டு. அதன்படி மன்னன், இங்கு அம்பாளை பிரதிஷ்டை செய்து, அவளையே பிரதானமாக்கி கோயிலை மாற்றியமைத்தான். மன்னன் பெயரால், "செண்பகத்தம்மன்' என்றழைக்கப்பட்ட இவளது பெயர் காலப்போக்கில் "செல்லத்தம்மன்' என மருவியதாகவும் சொல்கின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு செல்லத்தம்மனே பிரதானமாகி விட்டாள். இவளுக்கு பூஜை முடிந்த பின்பே, கண்ணகிக்கு பூஜை நடக்கும்.
கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளை தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர்.இக்கோயில் அமைக்கப்பட்ட நேரத்தில், கோயில் இருந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. கண்ணகியின் சிலை உக்கிரமாக இருந்ததால் இவ்வாறு நடப்பதாக மக்கள் நம்பினர். மன்னன் செண்பக பாண்டியன் இதுபற்றி ஆலோசித்தான்.
சிவபெருமானே அவனது கனவில், அவ்விடத்தில் தனது தேவி பார்வதியின் சிலையை அமைக்கச் சொன்னதாகச் சொல்வதுண்டு. அதன்படி மன்னன், இங்கு அம்பாளை பிரதிஷ்டை செய்து, அவளையே பிரதானமாக்கி கோயிலை மாற்றியமைத்தான். மன்னன் பெயரால், "செண்பகத்தம்மன்' என்றழைக்கப்பட்ட இவளது பெயர் காலப்போக்கில் "செல்லத்தம்மன்' என மருவியதாகவும் சொல்கின்றனர்.
இச்சம்பவத்துக்கு பிறகு செல்லத்தம்மனே பிரதானமாகி விட்டாள். இவளுக்கு பூஜை முடிந்த பின்பே, கண்ணகிக்கு பூஜை நடக்கும். |