LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

அம்புலிப்பருவம்

 

451 நீடுசுப மங்கையென றன்னியற் பெயராலு நிறுவியிவள் பொலிவணீயு -
      நிலவுஞ் சுபக்கிரக மென்றுரை செயப்பொலிவை நிகழ்கின்ற சமய மாறுங்,
கூடுமிட மாகக் குறித்தமர்வ ளிவள்பெருங் கும்பமுற் கடகம் வரையுங் -
      கூடிய விராசியோ ராறுமம ரிடமெனக் கொண்டமர்வை நீயு மடமை,
சாடுநர்கள் பெண்ணரசி யாயபெண் ணென்னவிவ டழைவள்பெண் கிரகமென்னத் -
      தழைவைநீயுந் தெரியினொப்பாக லுண்மையுயர் தவளமாடக் கொடிகண்மே,
லாடுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (1)
452 பாயநற வம்பொழியு மாம்பலை யுவப்பைநீ பற்பல்பம ரங்கண்மூசப் -
      பரவுதா னம்பொழியு மொருமருப் பாம்பலைப் பண்புற வுவப்பாளிவண்,
மேயபல கமலமு முகங்கவிழ் தரப்பொலி வியன்கரங் கொண்டு ளாய்நீ -
      விளம்புமக் கமலங்க ணாணினவ் வாறாம் வியன்கரங் கொண்டாளிவ, டோயமலி கடலக முதித்துளாய் நீபர சுகக்கட லுதித்தா ளிவள் -
      சொல்லுமிவை தேரிலொப்பாகா திராய்வளமை தொக்கவள காபுரியின்மிக்,
காயகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (2)
453 ஏன்றவொரு கும்பமுளை நீயுண்மை ஞானநிறை யிருகும்ப முள்ளாளிவ -
      ளியலுமொரு மீனமுளை நீகருணை வெள்ளநிறை யிருமீன முள்ளாளிவள்,
சான்றவோ ரேற்றினா னீதரும மாலெனத் தக்கவீ ரேற்றாளிவ -
      டங்குகற் கடகமொன் றுடையனீ யிருளறச் சாடுகற் கடகநாளுந்,
தோன்றவொ ரிரண்டுடைய ளிவளின்ன திறலுடைத் தோகைநிற் கதிகமென்று -
      சொல்லவேண் டுங்கொலோ வாவென் றழைத்தது சொலிற்கருணை யேவளத்தா,
லான்றகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. 
(3)
454 நிற்குரிய கும்பமொரு முடவன்விழை குவனிந்த நேரிழைக் குரியகும்ப -
      நெடுமறை முடிக்குமெட் டாதவொரு கும்பேச நிமலப் பிரான் விழைகுவன்,
சொற்குலவு நிற்குரிய வேறுபுகர் கொள்ளத் தொலைத்தனை யிவட் குரியவை -
      துங்கமுற் றெத்தகைய வானவரு மேத்தித் தொழப்பொலிவ வெந்த ஞான்றும்,
விற்குலவு நின்மீன் விரும்புமொரு பொன்னிவள் விசாலமீன் கடையை மண்ணும் -
      விண்ணும்விழை யும்மிவ ணினக்கதிக மென்பதால் விளைவதொன்றில்லை யென்று,
மற்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (4)
455 செய்யகதி ராயிரம் விரித்திரு ளரித்துவரு செம்மனின் னோடொத்தவன் -
      றிண்ணிய மடங்கலை விரும்பிய துணர்ந்துநீ சேற்றுநில மாக்கள்போல,
நொய்யசீ றலவனை விரும்பியப் பெயர்பூண்டு நோக்குறா குழல்வைசீய -
      நோன்மையி னுதித்திடும் போதுமத யானைவலி நூறிச் செகுக்குஞெண்டு,
வெய்யதாயனையுயி ரழித்தளைக் குள்ளொளியும் விழுமிய துணர்ந்தாய் கொலோ -
      வீபத்தெனும்பெயர் முதற்குறுக லடையாது மேலாய சார்புகோடற்,
கையகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (5)
456 தெரியவொரு கோளுண் டுமிழ்ந்திடப் பட்டுஞ் சிறந்தவா சாற்பிழைத்துத் -
      தீயவெஞ்சாபத் தொடக்குண்டு மோகஞ் செறிக்குமல ரான்சாபமே,
புரியதென வேற்குமொரு கோட்டும்ப னால்வா யுறுத்துசா பத்தொடக்குண் -
      டுழிதந்து மொழிதந்து நேர்தருமருங்குலா ரொள்ளணிகொண் ஞெள்ளன்மேவி,
விரியவெரு விட்டெறிய வெளிவந்து நீயுறுதன் மேதகைய விவளுணர்ந்து -
      மெய்ம்மையுண ராளினுனை யாடவா வெனவிளித் தனள்விழை யறஞ்செயாருக்,
கரியகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. 
(6)
457 எடுத்தவெஞ் செனவனல் கனன்றெழப் பொன்வெதுப் பேறிநிற் சுட்டகாலை -
      யித்தலச் சோமேச நீர்படிந் தனுகூல மெய்திய தயர்த்துளாயோ,
விடுத்தபெரு விதியினான் பக்கபா தஞ்செயல் விடுத்தில னெனச்சிறுவிதி -
      வெகுளத் தொடர்ந்தநோ யித்தளியுண் மேயநீர் வீட்டியது முட்கொண்டிலாய்,
தடுத்தபொறி யாளர்செறி யித்தல மகத்துவஞ் சற்றுமுண ராதவன்போற் -
      றாமதஞ் செயறக்க தன்றுபகை வென்றுமிளிர் தருதுவசம் வானுலகமீ,
தடுத்தகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (7)
458 சாற்றொரு தலஞ்செய்த பாதகம் விசேடத் தலத்தடையின் மாயுமந்தத் -
      தலத்துப் புரிந்தபா தகமிருங் காசித் தலத்தினைச் சாரமாயும்,
போற்றுமக் காசியிற் செய்தமா பாவமிப் புண்ணிய தலத்துமேவப் -
      போமென வுரைக்கும் புராணமத் தகையவிப் பொருவாத் தலத்தையுற்றுத்,
தோற்றுமா மகநீர் துளைந்துபொற் றாமரைத் தோயமுந் தோய்ந்தம்மைபொற்,
      றுணையடி வணங்கிநீ பெறுமிலா பத்தளவு சொல்லவல் லவரார்பொறை,
யாற்றுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (8)
459 துலங்குக்தன் றிருவடிக் கன்புபுரி யதிதிமுற் றோன்றப் புகன்றசாபத் -
      தொடக்குண்ட காசிபன் மிகும்புனற் காவிரித் துறையிற் படிந்தெழுந்து,
கலங்குதலி லாததவ மாற்றமற் றவனுளங் களிகொளுங் காட்சிநல்கிக் -
      கவற்றிய வலித்தன்மை யுந்தொலைத் தருள்செய்த கருணைப் பிராட்டியிவளான்,
மலங்குமன னோடவ மதித்தசிறு விதிசொற்ற வலியசா பத்தொடக்கான் -
      மாறிமா றிக்குறைத றீர்ந்துநீ யுயவருள் வழங்குவா ளெனல்வேண்டுமோ,
வலங்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (9)
460 பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை -
      பொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரைசெய்து காத்தேந்,
தெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர் -
      திக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை,
வெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த -
      வீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கு,
மருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (10)

 

451 நீடுசுப மங்கையென றன்னியற் பெயராலு நிறுவியிவள் பொலிவணீயு -

      நிலவுஞ் சுபக்கிரக மென்றுரை செயப்பொலிவை நிகழ்கின்ற சமய மாறுங்,

கூடுமிட மாகக் குறித்தமர்வ ளிவள்பெருங் கும்பமுற் கடகம் வரையுங் -

      கூடிய விராசியோ ராறுமம ரிடமெனக் கொண்டமர்வை நீயு மடமை,

சாடுநர்கள் பெண்ணரசி யாயபெண் ணென்னவிவ டழைவள்பெண் கிரகமென்னத் -

      தழைவைநீயுந் தெரியினொப்பாக லுண்மையுயர் தவளமாடக் கொடிகண்மே,

லாடுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (1)

 

452 பாயநற வம்பொழியு மாம்பலை யுவப்பைநீ பற்பல்பம ரங்கண்மூசப் -

      பரவுதா னம்பொழியு மொருமருப் பாம்பலைப் பண்புற வுவப்பாளிவண்,

மேயபல கமலமு முகங்கவிழ் தரப்பொலி வியன்கரங் கொண்டு ளாய்நீ -

      விளம்புமக் கமலங்க ணாணினவ் வாறாம் வியன்கரங் கொண்டாளிவ, டோயமலி கடலக முதித்துளாய் நீபர சுகக்கட லுதித்தா ளிவள் -

      சொல்லுமிவை தேரிலொப்பாகா திராய்வளமை தொக்கவள காபுரியின்மிக்,

காயகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (2)

 

453 ஏன்றவொரு கும்பமுளை நீயுண்மை ஞானநிறை யிருகும்ப முள்ளாளிவ -

      ளியலுமொரு மீனமுளை நீகருணை வெள்ளநிறை யிருமீன முள்ளாளிவள்,

சான்றவோ ரேற்றினா னீதரும மாலெனத் தக்கவீ ரேற்றாளிவ -

      டங்குகற் கடகமொன் றுடையனீ யிருளறச் சாடுகற் கடகநாளுந்,

தோன்றவொ ரிரண்டுடைய ளிவளின்ன திறலுடைத் தோகைநிற் கதிகமென்று -

      சொல்லவேண் டுங்கொலோ வாவென் றழைத்தது சொலிற்கருணை யேவளத்தா,

லான்றகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. 

(3)

 

454 நிற்குரிய கும்பமொரு முடவன்விழை குவனிந்த நேரிழைக் குரியகும்ப -

      நெடுமறை முடிக்குமெட் டாதவொரு கும்பேச நிமலப் பிரான் விழைகுவன்,

சொற்குலவு நிற்குரிய வேறுபுகர் கொள்ளத் தொலைத்தனை யிவட் குரியவை -

      துங்கமுற் றெத்தகைய வானவரு மேத்தித் தொழப்பொலிவ வெந்த ஞான்றும்,

விற்குலவு நின்மீன் விரும்புமொரு பொன்னிவள் விசாலமீன் கடையை மண்ணும் -

      விண்ணும்விழை யும்மிவ ணினக்கதிக மென்பதால் விளைவதொன்றில்லை யென்று,

மற்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (4)

 

455 செய்யகதி ராயிரம் விரித்திரு ளரித்துவரு செம்மனின் னோடொத்தவன் -

      றிண்ணிய மடங்கலை விரும்பிய துணர்ந்துநீ சேற்றுநில மாக்கள்போல,

நொய்யசீ றலவனை விரும்பியப் பெயர்பூண்டு நோக்குறா குழல்வைசீய -

      நோன்மையி னுதித்திடும் போதுமத யானைவலி நூறிச் செகுக்குஞெண்டு,

வெய்யதாயனையுயி ரழித்தளைக் குள்ளொளியும் விழுமிய துணர்ந்தாய் கொலோ -

      வீபத்தெனும்பெயர் முதற்குறுக லடையாது மேலாய சார்புகோடற்,

கையகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (5)

 

456 தெரியவொரு கோளுண் டுமிழ்ந்திடப் பட்டுஞ் சிறந்தவா சாற்பிழைத்துத் -

      தீயவெஞ்சாபத் தொடக்குண்டு மோகஞ் செறிக்குமல ரான்சாபமே,

புரியதென வேற்குமொரு கோட்டும்ப னால்வா யுறுத்துசா பத்தொடக்குண் -

      டுழிதந்து மொழிதந்து நேர்தருமருங்குலா ரொள்ளணிகொண் ஞெள்ளன்மேவி,

விரியவெரு விட்டெறிய வெளிவந்து நீயுறுதன் மேதகைய விவளுணர்ந்து -

      மெய்ம்மையுண ராளினுனை யாடவா வெனவிளித் தனள்விழை யறஞ்செயாருக்,

கரியகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. 

(6)

 

457 எடுத்தவெஞ் செனவனல் கனன்றெழப் பொன்வெதுப் பேறிநிற் சுட்டகாலை -

      யித்தலச் சோமேச நீர்படிந் தனுகூல மெய்திய தயர்த்துளாயோ,

விடுத்தபெரு விதியினான் பக்கபா தஞ்செயல் விடுத்தில னெனச்சிறுவிதி -

      வெகுளத் தொடர்ந்தநோ யித்தளியுண் மேயநீர் வீட்டியது முட்கொண்டிலாய்,

தடுத்தபொறி யாளர்செறி யித்தல மகத்துவஞ் சற்றுமுண ராதவன்போற் -

      றாமதஞ் செயறக்க தன்றுபகை வென்றுமிளிர் தருதுவசம் வானுலகமீ,

தடுத்தகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (7)

 

458 சாற்றொரு தலஞ்செய்த பாதகம் விசேடத் தலத்தடையின் மாயுமந்தத் -

      தலத்துப் புரிந்தபா தகமிருங் காசித் தலத்தினைச் சாரமாயும்,

போற்றுமக் காசியிற் செய்தமா பாவமிப் புண்ணிய தலத்துமேவப் -

      போமென வுரைக்கும் புராணமத் தகையவிப் பொருவாத் தலத்தையுற்றுத்,

தோற்றுமா மகநீர் துளைந்துபொற் றாமரைத் தோயமுந் தோய்ந்தம்மைபொற்,

      றுணையடி வணங்கிநீ பெறுமிலா பத்தளவு சொல்லவல் லவரார்பொறை,

யாற்றுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (8)

 

459 துலங்குக்தன் றிருவடிக் கன்புபுரி யதிதிமுற் றோன்றப் புகன்றசாபத் -

      தொடக்குண்ட காசிபன் மிகும்புனற் காவிரித் துறையிற் படிந்தெழுந்து,

கலங்குதலி லாததவ மாற்றமற் றவனுளங் களிகொளுங் காட்சிநல்கிக் -

      கவற்றிய வலித்தன்மை யுந்தொலைத் தருள்செய்த கருணைப் பிராட்டியிவளான்,

மலங்குமன னோடவ மதித்தசிறு விதிசொற்ற வலியசா பத்தொடக்கான் -

      மாறிமா றிக்குறைத றீர்ந்துநீ யுயவருள் வழங்குவா ளெனல்வேண்டுமோ,

வலங்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (9)

 

460 பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை -

      பொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரைசெய்து காத்தேந்,

தெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர் -

      திக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை,

வெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த -

      வீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கு,

மருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -

      யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.