|
|||||
ஜெய்யிக்கு ஜோடியாகிறார் ஆண்ட்ரியா!! |
|||||
எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கம் படத்தில் ஜெய்யிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது ஆண்ட்ரியா உத்தம வில்லன், விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா நகரத்து பெண்மணியாக நடிக்கிறார். இப்படத்தின் கதை ஆண்ட்ரியாவை மையமாக வைத்து எழுதப்பட்டதாக இயக்குனர் சரவணன் கூறியுள்ளார். இதுவே ஜெய் ஆண்ட்ரியா இணையும் முதல் படமாகும்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தும் என இயக்குனர் வட்டார தரப்பில் கூறப்படுகிறது. நடிகர் ஜெய் உடன் புதிய படத்தில் இணையும் நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், அரண்மனை மற்றும் தரமணி ஆகிய திரைப்படங்களும் அவரது கைவசம் உள்ளன. இந்நிலையில், அவர் நடிகர் ஜெய் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நகரத்து பெண்மணியாக நடிக்கிறார். இது குறித்து இயக்குனர் சரவணன் கூறும்போது, படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். நகரத்து கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் ரசிகர்கள் அவரை ஸ்டைலிஷ் ஆன பெண்ணாக பார்ப்பார்கள்.
காதல் மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்ததாக படம் இருக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக, நடிகர் ஜெய் உடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தது போன்று நடிகை அஞ்சலி நடிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் இது குறித்து சரவணன் கூறுகையில், எனது முதல் படத்தை போன்று இல்லாமல் இந்த படம் இருக்க வேண்டும் என்பதில் நான் மிக கவனமாக இருந்தேன். எனவே, இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை அஞ்சலியை அணுக கூடவில்லை. நடிகை ஆண்ட்ரியாவை கருத்தில் கொண்டே இந்த படத்தின் கதையை நான் எழுதினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
|
|||||
by Swathi on 18 Apr 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|