LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1115 - களவியல்

Next Kural >

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. (அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.)
மணக்குடவர் உரை:
அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
(பகற்குறிக்கட் பூவணிகண்டு சொல்லியது) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் - இவள் தன் இடை மென்மையை நோக்காது அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தன் தலைக்கணிந்தாள் ; நுசுப்பிற்கு நல்ல பறை படா - ஆகலால் , இனி இவளிடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா , அமங்கலப் பறைகளே முழங்கும் . அக் காம்பின் கனத்தைக் தாங்கமாட்டாமல் இவள் கொடியிடை ஒடியும் ; ஒடிந்தாற் சாவுநேரும் ; அன்று அமங்கலப்பறை தான் முழங்கும் , சாவு இடை முறிவால் நேர்வதால் , சாப்பறை முழக்கம் இடையை நோக்கியதாகச் சொல்லப்பட்டது , இடை யொடுக்கத்தை மிகுத்துக் காட்டியதால் இஃது உயர்வு நவிற்சியணி ' படாஅ ' இசை நிறையளபெடை , ' பறை ' பால்பகா வஃறிணைப் பெயர் . பகற்குறியாவது பாங்கியிற் கூட்டக் கால்த்திற் பகல் வேளையில் தலைமகனுந் தலைமகளுங் கூடுதற்குக் குறித்த இடம் .
கலைஞர் உரை:
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.
Translation
The flowers of the sensitive plant as a girdle around her she placed; The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist
Explanation
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
Transliteration
Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku Nalla Pataaa Parai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >