சென்னை : அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா வளைவை இடிக்க தடை விதித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, அவரால் 1.1.1986 அன்று திறந்து வைக்கப்பட்ட சென்னை மாநகரின் முக்கியமான அடையாளங்களில் சின்னங்களில் ஒன்றான ‘பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு’ அகற்றப்பட இருந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக முதல்வர் கூறினார். இது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டத்தில், போக்குவரத்து நெரிசல் காரணமாக வளைவை அகற்ற முடிவெடுத்ததாக அதிகாரிகள் கூறினார். அங்கு மேம்பாலம் கட்ட அன்றைய தி.மு.க அரசால் 2010 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டதாவும், அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகவே அண்ணா வளைவு அகற்றப்படுகிறது என்றும் கூறினர். விவாதத்துக்குப் பின், அண்ணா வளைவினை அகற்றாமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
|