LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கல்வியறிவு பயன்படவேண்டும்!!: பா.ம.குழுவின் (யு.ஜி.சி) தலைவர் வேத் பிரகாஷ்

சென்னை அண்ணா பல்கலையின், 33வது பட்டமளிப்பு விழா, நடந்தது. பல்கலைக்கழக் மான்யக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் இதில் கலந்து கொண்டு உறையாற்றினார்.

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின்  எண்ணிக்கையானது வளர்ந்து வருகின்ற வேகத்தைப் பார்க்கும்போது, 2017ஆம் ஆண்டில், 900 பல்கலைக் கழகங்களும், 47 ஆயிரம் கல்லூரிகளும் நிரம்பியிருக்கின்ற முதல் நாடாக இந்தியா இருக்கும்.

பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் அதிகரித்தாலும், கல்வியின் தரம் மேம்படவில்லை. சமுதாயத்தின் தேவையை, நாம் எப்படி பூர்த்தி செய்யப்போகிறோம் என்பது தான், பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் முன்னால் இருக்கும்  பிரதான கேள்வி.

தரமான கல்வி நிறுவனங்கள்; தரமான பாடத் திட்டம்; தரமான கற்பித்தல் முறை; தரமான ஆராய்ச்சித் திட்டங்கள் ஆகியவை இன்னும் அதிகரித்தால் தான், சமுதாயத்தின் தேவையை நாம் நிறைவேற்ற முடியும்.

சில மாணவர்களுக்கு, தமிழில் ஆழ்ந்த ஆளுமை இல்லாமல் இருக்கலாம். சில, மாணவர்களுக்கு ஆங்கிலத்தில், ஆழ்ந்த ஆளுமை இல்லாமல் இருக்கலாம். இப்படியுள்ள மாணவர்கள், மொழியில் சிறந்து விளங்கும் வகையில், பாடத்திட்டங்களைக் கொண்டு வந்து, கற்பிக்க வேண்டும்.

நாடு முழுவதுமே, ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை நடத்தினால், அது, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன் படாது. ஒவ்வொரு பகுதி வாரியாக, அதன் தேவையை அறிந்து, அதற்கேற்ற பாடத் திட்டங்களை உருவாக்கி, தரமான கல்வியை வழங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே, நாடு முன்னேறும்.

நாட்டில், இன்று 90 கோடி மக்கள், மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர்.  விவசாயிகள் கைகளிலும்கூட, மொபைல் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு, தரமான குடிநீரும், 24 மணிநேரமும், தடைபடாத மின்சாரமும் கிடைக்கிறதா என்றால் இல்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அனைத்திலும் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம் எனக், கூற முடியாது. குடிநீர், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும், மக்கள் அனைவருக்கும் முழுமையாக, கிடைக்க, நீங்கள் உங்களது கல்வி அறிவைப் பயன்படுத்த வேண்டும். என்று வேத் பிரகாஷ் கூறினார்.

by   on 09 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.