|
|||||
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கல்வியறிவு பயன்படவேண்டும்!!: பா.ம.குழுவின் (யு.ஜி.சி) தலைவர் வேத் பிரகாஷ் |
|||||
சென்னை அண்ணா பல்கலையின், 33வது பட்டமளிப்பு விழா, நடந்தது. பல்கலைக்கழக் மான்யக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் இதில் கலந்து கொண்டு உறையாற்றினார். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையானது வளர்ந்து வருகின்ற வேகத்தைப் பார்க்கும்போது, 2017ஆம் ஆண்டில், 900 பல்கலைக் கழகங்களும், 47 ஆயிரம் கல்லூரிகளும் நிரம்பியிருக்கின்ற முதல் நாடாக இந்தியா இருக்கும். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் அதிகரித்தாலும், கல்வியின் தரம் மேம்படவில்லை. சமுதாயத்தின் தேவையை, நாம் எப்படி பூர்த்தி செய்யப்போகிறோம் என்பது தான், பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் முன்னால் இருக்கும் பிரதான கேள்வி. தரமான கல்வி நிறுவனங்கள்; தரமான பாடத் திட்டம்; தரமான கற்பித்தல் முறை; தரமான ஆராய்ச்சித் திட்டங்கள் ஆகியவை இன்னும் அதிகரித்தால் தான், சமுதாயத்தின் தேவையை நாம் நிறைவேற்ற முடியும். சில மாணவர்களுக்கு, தமிழில் ஆழ்ந்த ஆளுமை இல்லாமல் இருக்கலாம். சில, மாணவர்களுக்கு ஆங்கிலத்தில், ஆழ்ந்த ஆளுமை இல்லாமல் இருக்கலாம். இப்படியுள்ள மாணவர்கள், மொழியில் சிறந்து விளங்கும் வகையில், பாடத்திட்டங்களைக் கொண்டு வந்து, கற்பிக்க வேண்டும். நாடு முழுவதுமே, ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை நடத்தினால், அது, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன் படாது. ஒவ்வொரு பகுதி வாரியாக, அதன் தேவையை அறிந்து, அதற்கேற்ற பாடத் திட்டங்களை உருவாக்கி, தரமான கல்வியை வழங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே, நாடு முன்னேறும். நாட்டில், இன்று 90 கோடி மக்கள், மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் கைகளிலும்கூட, மொபைல் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு, தரமான குடிநீரும், 24 மணிநேரமும், தடைபடாத மின்சாரமும் கிடைக்கிறதா என்றால் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அனைத்திலும் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம் எனக், கூற முடியாது. குடிநீர், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும், மக்கள் அனைவருக்கும் முழுமையாக, கிடைக்க, நீங்கள் உங்களது கல்வி அறிவைப் பயன்படுத்த வேண்டும். என்று வேத் பிரகாஷ் கூறினார். |
|||||
by on 09 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|