பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 3ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் மே 3 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்க உள்ள மையங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 20 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2014-15 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முழு விவரங்களுடன் கூடிய அறிவிப்பு மே 2 ஆம் தேதி வெளியாகும். மேலும், ஜூலை 31 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
|