பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் கடந்த 3 ம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
முதலில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப் பட்டிருந்தது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில் நேற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அன்னா பல்கலைக்கழகம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதன்படி, இம்மாதம் 27ம் தேதி வரையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், வரும் 27ம் தேதி வரை விண்ணப்ப வினியோகமும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|