|
|||||
அன்னக்கொடி - திரை விமர்சனம் |
|||||
நடிகர் : லட்சுமணன்
நடிகை : கார்த்திகா
வில்லன் : மனோஜ்
இயக்குனர் : பாரதிராஜா
இசை : ஜீ.வி. பிராகாஷ்
ஒளிபதிவு : சாலை சகாதேவன்
விமர்சனம் :
கதையின் கதாநாயகன் லட்சுமணன் ஒரு ஆடு மேய்க்கும் இளைஞன். இவருக்கும் பக்கத்து ஊரில் ஆடு மேய்க்கும் கதாநாயகி கார்த்திகாவும் இடையே காதல் மலருகிறது. லட்சுமணன் ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர் தான் மனோஜின் தந்தை. இவர் வாங்கிய பணத்திற்கு சரியாக வட்டிகட்டவிட்டால், கணவன் கண் முன்னே அவனது மனைவியை இழுத்துக்கொண்டு போகும் கொடூர மனம் உடையவர். வில்லனாக வரும் மனோஜ் லட்சுமணனின் ஆட்டு மந்தையில் உள்ள ஆட்டை திருடிச் சென்று விடுகிறார். இதனால் மனோஜுக்கும், லட்சுமணனுக்கும் இடையே பகை உண்டாகிறது.
வட்டி பணத்தை வசூல் செய்ய கார்த்திகா வீட்டுக்குச் சென்ற மனோஜ் அவரது அழகில் மயங்கி அவரை அடைய நினைக்கிறார். இந்நிலையில் சாராயம் காய்ச்சி கொண்டிருக்கும் கார்த்திகாவின் அம்மாவையும், கார்த்திகாவையும் போலீசார் கைது செய்கின்றனர். இதனை அறிந்த மனோஜ், போலீசாருக்கு பணம் கொடுத்து இருவரையும் விடுவித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். பிறகு கார்த்திகாவின் காதல் கதையை அவரது அம்மாவிடம் போட்டு உடைக்கிறார். இதனால் லட்சுமணன் மீது கார்த்திகாவின் அம்மா கோபம் கொள்கிறார். லட்சுமணனின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய மறுநாளே அவரது தந்தை மகனை அழைத்து கொண்டு கார்த்திகாவை பெண் கேட்க செல்கிறார்கள். அங்கே கார்த்திகாவின் அம்மா, லட்சுமணன் மற்றும் அவரது தந்தை மீது சாணத்தை கரைத்து ஊற்றி அவமானப்படுத்துகிறார். இந்த சண்டையின் உச்சகட்டமாக கார்த்திகாவின் அம்மா லட்சுமணனின் அப்பாவை அடிக்க, கோபத்தில் லட்சுமணன் கார்த்திகாவின் அம்மாவை எட்டி உதைக்கிறார். உடனே கார்த்திகாவின் அம்மா மனோஜ் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். அங்கு லட்சுமணனுக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனையும், அவனது தந்தைக்கு இரண்டு நாள் தண்டனையும் கிடைக்கிறது. தண்டனை முடிந்து வெளியே வந்த லட்சுமணனின் தந்தை, மனோஜ் தந்தையிடம் வட்டிக்குப் பணம் வாங்கி தனது மகனை ஜாமீனில் எடுக்கிறார். வெளியில் வந்து லட்சுமணன் கார்த்திகாவை கரம் பிடித்தாரா? இல்லை மனோஜ் கார்த்திகாவை அடைந்தார என்பதே படத்தின் மீதி கதை.
பலம் :
1.அறிமுக படத்தில் லட்சுமணன் கிராமத்து இளைஞர் வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.
2.வில்லனாக வரும் மனோஜ், கதாநாயகியாக வரும் கார்த்திகா ஆகியோரின் நடிப்பில் கிராமத்து மண்வாசனையை வீச வைத்திருக்கிறார் பாரதி ராஜா.
பலவீனம் :
1.படத்தின் பாடல்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. மேலும் பின்னணி இசையும் பரவாயில்லை.
2.பாரதிராஜாவின் பழைய படங்களை போலவே இந்த படத்தின் கதையிலும் தொய்வு. |
|||||
by Swathi on 29 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|