அன்டார்டிக்கா பனி மலைகள் கோடை வெப்பத்தின் காரணமாக கடந்த ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகமாக உருகிவருவதாக பிரிட்டன்-பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டன்-பிரான்ஸ் விஞ்ஞானிகள் கொண்ட குழு அன்டார்டிக்காவில், ஜேம்ஸ் ரோஸ் தீவில் 364 மீட்டர் ஆழத்துக்கு துளையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் பனி கட்டிகளின் அடர்த்தி வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்தது. மேலும் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் நச்சுக்களால், பூமி வெப்பமடைந்து, பனி மலைகள் உருகி வருவதால், கடல் மட்டம் அதிகரித்து, பல தீவுகள் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|