LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

பாரத மாதாவின் எழுச்சி மகன்! ( ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் கவிதை) - ரா.ந.ஜெயராமன் ஆனந்தி

தாயின் கருவில் தாயகம் காக்க..

உதித்து எழுந்த தலைமகனே!

தொப்புள் கொடி அறுத்து

தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று

தாயின் கண்ணீர் சொன்னது

புனித பூமியில் உதித்து மேலும்

புனிதம் சேர்த்த புனிதன் .. நீ!


அன்னை கொதிவிட்ட நேர்வாக்கு

அப்துல்கலாமின் தலைஎழுத்தை மட்டும் அல்ல

இந்தியாவின் தலையெழுத்தை அன்றே

நிருபித்தவள்.. இந்தியா உச்சம் தொடும் என..

 

விட்ட படிப்பை தொடரவிட்டது அக்காவின் கை வளையல்

அடகுகடையில் தத்தளித்தது

உந்தன் மனதையும் அடகு வைத்தாய்..

இந்தியா  வல்லரசாக வேண்டும்-என



கடைக்கோடி குடிமகன்

அரசு பள்ளியில்-தன்

அசுர உழைப்பால்

உச்சம் தொடலாம் என உச்சம்

தொட்டுக்காட்டிய முதல் குடிமகன் நீ!!

விஞ்ஞானத்தை நாட்டிற்கும்

மெய்ஞானத்தை இளைஞர்களுக்கும்

விதைத்த பாரத மாதாவின் எழுச்சி மகன்.. நீ

 


இன்பம் எதுவரை எதுவரை

துன்பம் எதுவரை எதுவரை

இன்பம் துன்பம்

இரண்டையும் ஓட ஓட விரட்டிய மனிதன்-நீ.. இல்லை இல்லை மா மனிதன் நீ!


அன்னைத் தமிழ் மெய் ஞானம்

அசுரவளர்ச்சி விஞ்ஞானம்

அன்னை பாதம் தொட்டு...

உச்சம் தொட்ட எழுச்சி மகன் .. நீ!

உன்னைவிட உயர்ந்த கடவுள்

உலகில் இல்லை - இனி

எந்த மனிதனும் உன்னை போன்று

பிறக்கப் போவதும் இல்லை - இனி

தனக்கு நிகர் தானே - என்று

மதங்கள் யாவும் இணைந்து

வணங்கிடும் முதற்கடவுள்

பாரத மாதாவின் எழுச்சி மகன்!

எங்கள் அப்துல் கலாமே!

எங்கள் அப்துல் கலாமே!



என்றும் அன்புடன்...

ரா.ந.ஜெயராமன் ஆனந்தி
கீழப்பெரம்பலூர்

by Swathi   on 28 Jul 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.