அலெக்ஸ் பாண்டியன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படம் அப்பாடக்கர்.
இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ராவி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். சூரி இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதால், படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் வேலை வெட்டியில்லாமல் சுற்றித் திரிகிறார்கள் ஜெயம்ரவியும், அவரது நண்பர் சூரியும். எந்த பிரச்னையிலும் இருந்து ஈசியாக தப்பித்து வருகிறவர்களை "அவன் பெரிய அப்பாடக்கருப்பா" என்பார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஜெயம்ரவி. உள்ளூர் பெண் அஞ்சலியை ஜாலிக்காக காதலிப்பார். அதாவது டைம் பாசுக்கு. ஆனால் அஞ்சலியோ உண்மையாக தீவிரமாக காதலிப்பார்.
ஜெயம்ரவியின் ஜாலியான காதலுக்கும், அஞ்சலியின் தீவிரமான காதலுக்கு இடையில் கிடந்து அல்லாடுவார் சூரி. அஞ்சலி துடுக்குத்தனமான வாயாடி பொண்ணு. நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டார். ஒரு கட்டத்தில் அஞ்சலி தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி ரவியை மிரட்ட, தப்பித்து சென்னைக்கு வருகிறார் ஜெயம்ரவி.
சென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு த்ரிஷா மீது நிஜமான காதல் வருகிறது. த்ரிஷாவுக்கு ஜெயம்ரவி மீது காதல் இருந்தாலும் அவரது அப்பாடக்கர் கேரக்டரை மாற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிராமத்துக்கு திரும்புகிறார்கள்.
அஞ்சலி விளையாட்டுத்தனமான பொண்ணு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கும்னு நம்பி வருகிறவருக்கு ஷாக். அஞ்சலி காதல் இன்னும் தீவிரமாகி ரவிக்காக காத்திருக்கிறார். அஞ்சலியும், த்ரிஷாவும் சந்திக்கிறார்கள். பூகம்பம் வெடிக்கிறது, அனல் பறக்கிறது. இருவராலும் சூரி பந்தாடப்படுகிறார். இறுதியில் ஜெயம்ரவி யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் கதையாம்.
|