LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

அப்பச்சி...

நான்

உலகமறியாப்

பருவங்களில்

என் விரல் பிடித்து

உலகு காட்டிய

அந்த விரல்கள் .....

 

வயதான

காலத்திலும்

நாள் தோறும்

சுறுசுறுப்புக்கு

பேர் சொன்ன

அந்தக் கால்கள் ...

 

காந்தியின்

கண்ணாடி

நினைவிருக்கிறதோ

இல்லையோ

என் நினைவுக்குறிப்புகளில்

அச்சடிக்கப் பட்டுவிட்ட

அந்தக் கண்ணாடி ...

 

நரைத்த

தலையும் ...

 

கஞ்சி போட்டு

மடிப்பு கலையாத

வெள்ளை வேட்டியும்

சட்டையும் ....

 

எல்லாம்

என் அப்பச்சியின்

அடையாளங்கள் ....

 

ஓரிரு

மாதங்கள் கழிந்து

ஊருக்கு போனால்

எனக்கொன்று

அவர் எடுத்து வைத்திருக்கும்

“ அணில் கொரித்த

கொய்யாப்பழம் “ .....

 

ஊரை விட்டு

கிளம்பும் போதெல்லாம்

எனக்கு சொல்லிவிடுகிற

“ புத்திமதிகள் “ ....

 

அமைதியாகவும்

அழகாகவும்

வாழ்ந்துவிட்ட

அவரது காலங்கள் ...

 

எல்லாம்

என் அப்பச்சியின்

நினைவுகள் ....

 

பெருகி வந்து

என் கண் மறைக்கிறது ...

 

வழிகிற

கண்ணீர்

என் மீசை நனைக்கிறது ....

 

வேறொன்றுமில்லை

நேற்று

என்னிடம் சொல்லாமல்

“ போய்விட்டார் “ .....

 

நாடு விட்டு

நான் வந்த பொழுதில்

வீடு விட்டு

காடு சேர்ந்துவிட்டார் ....

 

மூன்றாவது மனிதனாய்

நின்று பார்த்து

தேற்றிக்கொள்ள

முடியவில்லை ...

 

எலும்பு

சதை

ஊண்

உயிர்

எல்லாவற்றிலும்

அவரோடு கலந்துவிட்ட

நான் என்ன செய்ய ....

 

எங்கே

சாய்ந்துகொள்ள ...

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
30-Jun-2015 00:17:04 ந.ஜெயபாலன்,திருநெல்வேலி நகர் said : Report Abuse
நல்ல பதிவு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.