LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்

அடி வாங்கிக்கொண்டு கற்ற
பாடங்களால் அல்ல,

பள்ளிவீதியில்
நாகப்பழம்
அவித்த கிழங்கு
வறுத்த வேர்கடலை
வெம்பிப்போன காட்டுக் கலாக்காய் விற்ற
பாட்டியால்தான் – பள்ளிக்கூடம்
இன்றுவரை நினைவில் இருக்கிறது..
 
சந்தேகக் கேசில்
பிடித்து உள்ளே போடுமென்றுத்
தெரிந்தும்
காவல்நிலையத்தை தாண்டிப்போய்
இரவு காட்சி பார்க்கவைத்தது
அந்தக் கால சினிமாக்கள்
மட்டுமல்ல,
வயதும் தானென்று
இப்போது புரிகிறது..
 
நெல் வேகும் வாசம்
மண் நனையும் வெப்பம்
தெருவோர மதிலெட்டிப் பார்க்கும்
செம்பருத்திப் பூக்கள்
கிணற்றடிப் பெண்கள்
மார்கழி கோலம்
திருவிழாக்களில் புதுப்படம்
மாலைநேர மீன் பண்
குல்பி ஐஸ்
இதுபோன்ற எத்தனையையோ
தொலைத்துவிட்டுத்தான் -
நம்மூர் சிட்டியாகிறது..

தும்பிவால் பிடித்து
ரக்கை ஒடித்தது
ஓணானடித்து
குச்சிலே தொங்கவிடுவது,

குருவி அடித்துவிட்டு
துள்ளிகுதித்தது,

காக்கா அடிக்க
உண்டிகோல் செய்ததுயெல்லாம்
யாருக்குமின்று தெரியாவிட்டாலென்ன;

மனதுள் உயிரோடிருக்கிறதந்த
உயிர்கள் துடித்த தருணமெல்லாம்..

 

- வித்யாசாகர்

by Swathi   on 19 Mar 2015  0 Comments
Tags: Vidhyasaagar   Vidhyasaagar Kavithaigal   Vidhyasaagar Kadhal Kavithaikal   Vidhyasaagar Poems   வித்யாசாகர்   வித்யாசாகர் கவிதைகள்   வித்யாசாகர் காதல் கவிதைகள்  
 தொடர்புடையவை-Related Articles
மகளெனும் கடல்.. வித்யாசாகர்! மகளெனும் கடல்.. வித்யாசாகர்!
மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்! மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்!
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்! ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்!
என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர் என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர்
கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்.. கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.