இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கதைகளுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இதற்கு காரணம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈரானிய இயக்குனர் மஜீத் என்பவரை ரகுமான் சந்தித்தபோது, அந்த ஈரானிய இயக்குனர், உங்களது இசையை, உங்கள் கலாசார தன்மை இல்லாமல் மேற்கத்திய பாணியில் வெளிப்படுத்துவது ஏன்? என்று கேட்டாராம். அதற்கு சரியான பதில் கொடுக்க முடியாமல் தடுமாறிய ரகுமான். அதன் பின், தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கதைகளுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டி வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|