LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

அரங்கனைத் தொழலாம்... வாருங்கள்! - சீ.குறிஞ்சிச்செல்வன்

இறையை உணர்தலே இறையுணர்வு எனப்படும். இறையுணர்வு கிடைக்க ஐம்பொறிகளும் துணைநிற்றல் அவசியம். அவ்வைம்பொறிகளும் அத்துணை எளிதாய் வசப்பட்டுவிடுமா என்ன? ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் அடங்காப் பிடாரிகள்தான். வெறும் கைகூப்பி வணங்கி வெளிப்படுத்துதல் மட்டுமே பக்தி ஆகிவிடாது.

திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தனது "திருவரங்கக் கலம்பக'த்தில் அடியார்களின் மனநிலையை அழகாகவும் வியந்தும் விவரிக்கிறார்.


எல்லோரும் நாள் தவறாது கோயிலுக்கு வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். ஆனால், ஆடிப்பாடி அரற்றுதலை எத்தனைபேர் செய்கிறார்கள்? கைகூப்பி வணங்குவதைக்கூட ஒரு பெரிய செயலாக நினைக்கிறார்கள். கரைந்து உருகும் போக்கு எத்தனை பேரிடம் உள்ளது? ஓர் ஆழ்வார் பாசுரமேனும் சொல்ல தலைப்படுகிறார்களா? இல்லை தியானம்தான் செய்கிறார்களா? இறைவனைக் கண்ணுற்றதால் ஏற்படும் பரவச நிலைக்குத்தான் ஆட்படுகிறார்களா? எதுவுமில்லை.

காய்கறிக் கடைக்குப் போய்விட்டு வருவது மாதிரி; மளிகை, நியாயவிலைக் கடை (ரேஷன்)களுக்குப் போய்விட்டு வருவது மாதிரி; போனேன், பார்த்தேன், வாங்கினேன், வந்தேன் என்பதுபோல அங்கரனை தரிசிப்பது முறையாகுமா?

பெரியபெருமாள் எத்துணை அளப்பரியவர். பதின்மர் பாடிய பெருமாள் ஆயிற்றே! திவ்யகவியார், வணங்கும் முறைபற்றி இப்பாடலில் பெரிய இலக்கணமே வகுத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும், ஐம்பொறிகளின் ஆபத்திலிருந்து விடுபடவும், அவர் இப்பாடலில் விடை சொல்லியிருக்கிறார்.

""தேடுகின்றனை, ஐம்பொறிகளுக்கு இரை தேடியும் கிடையாமல்,
 வாடுகின்றனை; வீடு சென்று, என்று,
 இனி மருவுவை? -மட நெஞ்சே!
 ஆடுகின்றிலை, அழுகிலை, தொழுகிலை அரங்கனைக் கரம் கூப்பி,
 பாடுகின்றிலை, நினைகிலை -பதின்மர்தம்
 பாடலின் படியாயே'' (பா-35)

மனித மனோநிலையை உளவியல் ரீதியில் திவ்யகவி அடுத்தப் பாடலில் அளவிட்டுக் காட்டுகிறார். "தாய், மனைவி, மக்கள், தந்தை, சோறு, பொருள் இவை மட்டுமே பெரிது என்று எண்ணும் அறியாமை குணத்தை எப்போது விடப்போகிறீர்?' எனக் கேட்கிறார். நோய், கிழத்தன்மை, பிறப்பு, இறப்பு இவற்றை ஒழிக்கப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்களே, பேசாமல் அரங்கனை வழிபடுங்கள். அவன் அனைத்தையும் கவனித்துக் கொள்வான். நற்கதி தருபவன் அரங்கன் ஒருவனே எனும் நோக்கில் இப்பாடலை அமைத்துள்ளார். வீண் மன உளைச்சலில் உழல்வார்க்கு இப்பாடல் ஒரு மா மருந்து.

 ""ஆயினை, மனையை, சேயினை, பிதாவை
 அனத்தினை, தனத்தினை, விரும்பும்
 பேயினை மறந்து, நோயினை, மூப்பை
 பிறப்பினை, இறப்பினை, துடைப்பீர் -
 ஆயனை, முளரி வாயனை, எங்கள்
 அமலனை, கமலனைப் பயந்த
 தாயனை, நெடிய மாயனை, வடபால்-
 தரங்கனை, அரங்கனை - தொழுமே'' (பா-36)

அரங்கனைத் தொழுவதால் உண்டாகும் பலனை அடியவர்க்கு பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் உணர்த்தியுள்ள பாங்கு மிகவும் போற்றுதற்குரியது.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.