கடந்த செப்டம்பர் மாதம் 19ந் தேதி வெளியான அரண்மனை படம் 50 நாளை கடந்து, தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சுந்தர்.சி, சந்தானம் கோவை சரளா ஆகியோர் நடித்த இந்த படத்தை சுந்தர்.சி-யே தனது காமெடி பாணியில் இயக்கியுள்ளார்.
அரண்மனை திரையிடப்பட்ட சென்னையின் பெரும்பாலான தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. காட்சிகளின் எண்ணிக்கை மட்டுமே குறைந்துள்ளது. சென்னையில் 30 தியேட்டர்களில் திரையிடப்பட்டதில் தற்போது 23 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி, கோவை, சேலம் நகரங்களில் ஒருசில தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் செகண்ட் ஷிப்டிங்காக ஓடிக் கொண்டிக்கிறது.
சுமார் 5 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 20 கோடி வரை வசூலித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
|