LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
-

அரசனின் குதிரை

சின்னஞ் சிறிய நாடொன்றைச்
….சிறப்பாய் ஆண்டான் ஓரரசன்,
முன்னோர் சொல்லை மதிப்பவனாம்,
….மூர்க்கம் இல்லா நல்லரசன்!

மன்னன் படையில் ஒருகுதிரை,
….மதயா னைபோல் கம்பீரம்,
மின்னல் போலே பாய்ந்திடுமாம்,
….மிடுக்கும் நடையும் சங்கீதம்!

அந்தக் குதிரை மேலேறி
…அரசன் செல்வான் நாடெங்கும்,
வந்தனம் சொல்லி வந்தசனம்,
….வாழ்த்திப் போற்றி வணங்கிடுமாம்!

இதனால் குதிரை மனத்தினிலே,
….ஏறிக் கொண்டது கர்வகனம்,
விதவித சிந்தனை கொண்டதனால்
….விலகிப் போனது நல்லகுணம்!

‘என்மேல் ஏறிச் செல்வதனால்,
….எழிலைப் பெறுவான் அரசனுமே,
என்றால் என்போல் பேரழகு
….எவருக் குண்டு நாட்டினிலே?’

என்றே எண்ணி அக்குதிரை
….எல்லை இல்லா ஆணவத்தில்
பொன்போல் மனத்தைப் புழுதியிலே
….புரட்டிப் பழுதாய் ஆக்கியதாம்.

மறுநாள் மன்னன் குதிரையிலே
….மக்களைக் காணச் செல்கையிலே,
குறுக்கே கிடந்தது ஒருபள்ளம்
….குட்டை யாகச் சேற்றுடனே!

சேற்றைக் கண்ட அக்குதிரை
….சிணுங்கி உடனே நின்றதுவாம்,
‘ஆற்றல் நிறைந்த என்மீது
….அசிங்கச் சேறு படலாமா?’

மன்னன் சிரித்தான், கீழிறங்கி
….மளமள வென்று குட்டையினை
நன்றாய் நொடியில் தாண்டினனாம்,
….நடந்தே சனத்தைச் சந்திக்க!

அரசன் செயலைக் கண்டசனம்
….அவனைப் புகழ்ந்து போற்றியதாம்,
சிரத்தைத் தாழ்த்தி அக்குதிரை
….சிந்தனை யோடு வருந்தியதாம்!

‘கடமை ஆற்றுதல் நற்பெருமை,
….கர்வம் கொள்ளல் ஆகாது,
மடமை யாகச் சிந்தித்தே,
….மடையன் ஆனேன் பணியாது!’

‘அழகைப் போற்றிப் பயனில்லை,
….ஆற்றல் மட்டும் பெரிதில்லை,
பழகும் இனிமை ஒன்றேதான்,
….பதவிக் கென்றும் மரியாதை!’

by Swathi   on 19 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.