|
|||||
தமிழக அரசின் கேபிள் டிவியை டிஜிட்டல் தரத்திற்கான உரிமம் வழங்க - பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் ! |
|||||
தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் தரத்திற்கான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை நிறுவி தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான கேபிள் இணைப்புகளை வழங்கியுள்ளது.இத்திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இதற்கிடையே கேபிள் டிவி தரத்தை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு மத்திய அரசிடம் பலமுறை விண்ணபித்தும் உரிய பதில் கிடைக்காததால்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தது,உயர்நீதிமன்றமும் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் மயத்துக்கான உரிமம் வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.இந்தப் பிரச்னையில் பிரதமர் உடனே தலையிட்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உடனடியாக டிஜிட்டல் மயத்துக்கான உரிமம் கிடைக்க தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரகத்துக்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு எழுதயுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
|||||
Arasu Cable DAS licence: Jaya reminds PM | |||||
In her letter to the PM, CM Jayalalithaa wrote that Arasu Cable application was still pending after it had applied for a DAS license with Union I and B ministry on 5.7.2012 though the ministry had issued licenses to 9 other operators in TN.Saying that the digitisation of cable TV distribution had to be done within a stipulated time period, the CM said she had sent party delegations to meet the PM and the former and current Union Broadcasting Ministers on the issue.Her letter also noted an order passed by the Madurai Bench High Court that a licence may be issued to Arasu Cable. |
|||||
by Swathi on 17 Dec 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|