அறிவை அறிய ஆர்வம் எழுந்து விட்டால் அது தன்னையறிந்து முடிக்கும் வரையில் அமைதி பெறாது. எனவே, அவ்வார்வம் எழுச்சி பெற்ற அனைவரும் அறிவை அறிந்து கொள்ள வேண்டும். புத்தகம் மூலமாகவோ வெறும் விளக்கங்கள் மூலமாகவோ அறிவுதனையறிந்து கொள்ள முடியாது. முறையான அகநோக்குப் பயிற்சி தேவை. தகுந்த வழிகாட்டி மூலமே இது எளிதில் கிட்டும்....
உயிர் ஆற்றலை உள்ளுணர்வாகப் பெற்றால் தான் அறிவு, படர்க்கை நிலையொழிந்து உயிராகி நிற்கும். அதன் பிறகு, மேலும் ஒடுங்கி நிற்கப் பரமாகியும் அனுபவம் பெறும்.
இவ்வாறு, தானே தன்மலர்ச்சி நிலைகள் ஒவ்வொன்றையும் உள்ளடக்கமாகக் கடந்து, முடிவில் தன்னையே மெய்ப் பொருளாக உணர ஏற்ற சாதனை தான் அகத்தவம் ஆகும். இதனை யோகம் என்றும் கூறுகிறோம்.
தானே அனுபத்தால் தன்னை மெய்ப்பொருளாக உணரும் நிலையே மெய்ஞ்ஞானம் ஆகும்., மெய்ஞ்ஞானம் மக்களிடையே மலரும் அளவிற்கு உலகில் அமைதியும் இன்பமும் ஓங்கும். எனவே நமது கடமைகளில் "மெய்ஞ்ஞானம்" உலகில் மலர ஏற்ற தொண்டினை மேன்மையுள்ள ஒன்றாக மதித்து செயலாற்றுவோமாக.
|