|
|||||
அறிவு |
|||||
புத்தியே சகல சக்தியும்
நினைத்தவை அனைத்தும் நிறைவேற்றிடும்
அறிவு என்பது சொல்லும் சொல் தெளிவாகச் சொல்லுதல்
செறிவு என்பது சொன்ன சொல் மாறாது இருத்தல்
ஆயுளின் அருமை நீளத்தில் இல்லை அகலத்தால் அளக்கப்படுகிறது
அறிவின் பெருமை சத்தத்தில் இல்லை சுத்தத்தால் அறியப்படுகிறது
கத்தியது கூரானால் தான் பொருள்கள் சரியாக வெட்டப்படும்
புத்தியது கூரானால் தான் செயல்கள் தெளிவாக செய்யப்படும்
குடமளவு நீரென அறிவிருந்தாலும் பயன்பட்டால் பெருமை
கடலளவு நீரென பரந்திருந்தாலும் பயன்படாததால் சிறுமை
அலங்காரம் இல்லாத அழகே இனிமையானது
அகங்காரம் இல்லாத அறிவே முழுமையானது
ஒரு நூறு மரத்தின் விலையை விட ஒரு பொன் முடிக்கே மதிப்பு
ஒரு நூறுமூடரின் கருத்தைவிட ஒரு அறிஞர் முடிவே தெளிவு
புத்தகம் மேய்ந்தவர் பதவியில் அமர்த்தப்படுவார்
நுனிப்புல்லை மேய்ந்தவர் பட்டியல் அடைக்கப்படுவார்
விடிய விடிய கண்ணுக்கு பொருட்கள் புலப்படும்
படிக்க படிக்க நமக்கு அறியாமை புலப்படும்
கருத்தில்லாத பேச்சை கேட்பது கண்ணில்லாத முகத்தை பார்ப்பது போல
கற்பில்லாத பெண்ணை பார்ப்பது தலையில்லாத உடலைப் பார்ப்பது போல வேதனை
புத்தியே சகல சக்தியும் நினைத்தவை அனைத்தும் நிறைவேற்றிடும்
அறிவு என்பது சொல்லும் சொல் தெளிவாகச் சொல்லுதல் செறிவு என்பது சொன்ன சொல் மாறாது இருத்தல்
ஆயுளின் அருமை நீளத்தில் இல்லை அகலத்தால் அளக்கப்படுகிறது அறிவின் பெருமை சத்தத்தில் இல்லை சுத்தத்தால் அறியப்படுகிறது
கத்தியது கூரானால் தான் பொருள்கள் சரியாக வெட்டப்படும் புத்தியது கூரானால் தான் செயல்கள் தெளிவாக செய்யப்படும்
குடமளவு நீரென அறிவிருந்தாலும் பயன்பட்டால் பெருமை கடலளவு நீரென பரந்திருந்தாலும் பயன்படாததால் சிறுமை
அலங்காரம் இல்லாத அழகே இனிமையானது அகங்காரம் இல்லாத அறிவே முழுமையானது
ஒரு நூறு மரத்தின் விலையை விட ஒரு பொன் முடிக்கே மதிப்பு ஒரு நூறுமூடரின் கருத்தைவிட ஒரு அறிஞர் முடிவே தெளிவு
புத்தகம் மேய்ந்தவர் பதவியில் அமர்த்தப்படுவார் நுனிப்புல்லை மேய்ந்தவர் பட்டியல் அடைக்கப்படுவார்
விடிய விடிய கண்ணுக்கு பொருட்கள் புலப்படும் படிக்க படிக்க நமக்கு அறியாமை புலப்படும்
கருத்தில்லாத பேச்சை கேட்பது கண்ணில்லாத முகத்தை பார்ப்பது போல கற்பில்லாத பெண்ணை பார்ப்பது தலையில்லாத உடலைப் பார்ப்பது போல வேதனை
|
|||||
by Swathi on 30 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|