தேவையானவை :
பச்சரிசி - 4 கப் சீனி - 500 கிராம் கம்பிக்குருணல் - ஒரு கப் தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப ஏலப்பொடி - 2 தேக்கரண்டி
செய்முறை :
1.பச்சரிசியை ஒரு மணி நேரம் தண்ணிரில் ஊறவிடவும்.பிறகு அரிசியை மாவாக இடிக்கவும்.இடித்த மாவை மூன்று முறை சலிக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் மாவை போடவும். மாவை அரித்த பின்பு கிடைக்கும் சிறிய குருணலை எடுத்து அதிலுள்ள அழுக்குகளை அகற்றவும். 3.அதன் பின்பு சலித்த மாவிற்கு மேலே குருணலை போடவும். அப்பாத்திரத்தில் சீனி , ஏலக்காய்த்தூள் இவையிரண்டையும் போடவும். 4.அப்பாத்திரத்தை காற்று உள்ளே போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும். 5.அடுத்த நாள் பாத்திரத்திலுள்ள மாவை நன்றாக கைகளால் குழைக்கவும் குழைத்த மாவை அளவான உருண்டைகளாக்கவும். பின்பு உருண்டைகளை இலேசாக அமர்த்தவும். 6.அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் எண்ணெயை கொதிக்க வைக்கவும் கொதித்த எண்ணெயில் அமர்த்திய உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
|