|
||||||
இயற்கை சமையலில் அசத்தும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் !! |
||||||
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் கடந்த ஒரு வருடமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, மண்பானை தண்ணீர், அதை குடிக்க மண் குடுவை, சுவற்றில் பளீர் நிறத்தில் அழகாக எழுதப்பட்ட சிறுதானியங்களின் மருத்துவ குணங்களைச் சொல்லும் வாசகங்கள்... எனப் பழமை மாறாமல் இருக்கிறது, இந்த ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய உணவகம். சமையல், வரவேற்பு, உபசரிப்பு என இங்கு மற்ற பணியில் இருப்பவர்கள் அனைவரும் பெண்களே ! ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் குறித்து அதன் உரிமையாளர் லட்சுமி பேசும்போது, இந்த உணவகத்தை கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறோம். கம்பு, ராகி ,சோளம் ,வரகு,தினை, சாமை, குதிரைவாலி, மாப்பிளைசம்பா அரிசி, கருங்குருவை அரிசி , காட்டுயானம் அரிசி ,சிகப்புக்கவுனிஅரிசி ,கருப்புக்கவுனி அரிசி போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட இட்லி ,தோசை ,பொங்கல் ,ஆப்பம் ,கார தோசை ,குஸ்கா போன்றவை தயார் செய்கிறோம். தினம் ஒரு கீரை சூப், நெல்லிசாறு, இஞ்சிசாறு, ஆவாரம்பூ டீ , போன்றவையும் கிடைக்கிறது . வெள்ளைசர்க்கரை, மைதா, போன்றவை உபயோகம் இல்லை. தினை முறுக்கு, கம்புமுருக்கு, குதிரைவாலிமுருக்கு, சாமைமுறுக்கு, வரகுகாரசேவு, எள்உருண்டை, கடலை உருண்டை , ஜவ்வரசிலட்டு போன்ற கார மற்றும் இனிப்பு வகைகளும் கிடைக்கின்றன. முகவரி ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம், 31.பாபுகான் வீதி, உடுமலைப்பேட்டை ., திருப்பூர் மாவட்டம். செல்-9489324220. |
||||||
by Swathi on 11 Jun 2014 1 Comments | ||||||
Tags: Arogya Unavagam Parambariya Unavagam இயற்கை உணவகம் பாரம்பரிய உணவகம் | ||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|