LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விண்வெளி போக 2022 ல் தயாராக இருங்க!

இந்தியர்கள் 2022-ம் ஆண்டில் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று திரும்புவதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகிறதாம். விண்வெளி போக விரும்புவோர் தயாராக இருங்கள்.

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி இங்கர்சால், ராமேஸ்வரத்தில்  உள்ள அப்துல்கலாம்  சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் அவர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.  ‘‘இந்தியர்களின் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இஸ்ரோ திட்டங்களைத் தயாரித்து வருகிறது. 2022ம் ஆண்டு, இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடிய நேரத்தில் இந்தியர்கள் விண்வெளி செல்வது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும். 


இதற்காக நாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கக்கூடிய ராக்கெட்டுகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், பலவகையான பரிசோதனைகளை செய்து வருகின்றோம்.   அதற்கான முதல்கட்ட முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றோம். 


முதலில் மனிதர்கள் இல்லாமல் இரண்டு விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.  முழுமையான நம்பிக்கை வந்தபின் 2022ல் மனிதர்கள் விண்கலத்தில் சென்று விண்வெளியில் சுற்றிவரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.


இதற்கான ஆராய்ச்சிகளையும், பரிசோதனை முயற்சிகளையும் சிறப்பாகச் செய்து வருகிறோம்" என்றார்.

by Mani Bharathi   on 14 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.