LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

இ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்!

பள்ளி திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமலேயே பலர் உள்ளனர். அதனால் பல தடவை அலைந்து மிகவும் சிரமப்படுகிறார்கள். மக்களின் சிரமங்களை  அறிந்து இந்த தகவலைத் தொகுத்து வழங்குகிறோம்

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் (டி.சி.), மதிப்பெண் பட்டியல் (10,12) ஜாதி,வருமானச் சான்றிதழ்,முதல் பட்டதாரி பத்திரம்,குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்விச் சான்றிதழ்தொலைபேசி எண் (உறுதிப்படுத்தும் ஓடிபி எண் வருவதற்கு வசதியாக), இவை அனைத்தும் அசல் மற்றும் நகல் அவசியம்.

ஜாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

குடும்ப அட்டை,  ஆதார் அட்டை,மாற்றுச்சான்றிதழ் (டிசி) அல்லது தந்தையின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தந்தையின் ஜாதிச் சான்றிதழ், புகைப்படம்,தொலைபேசி எண் (உறுதிப்படுத்த ஓடிபி எண் வருவதற்கு வசதியாக), இவை  அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்

வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்று, நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு எண்),தொலைபேசி எண் (உறுதிப்படுத்த ஓடிபி வருவதற்கு வசதியாக),புகைப்படம், அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை.

இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்:

குடும்ப அட்டை, ஆதார் அட்டை,தொலைபேசி எண் (உறுதிப்படுத்த ஓடிபி எண் வருவதற்கு வசதியாக), புகைப்படம்,  இவை அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவைப்படும்.

மேலும் அந்தந்த ஊர்களில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் நீங்கள்  உங்களுடையஅலைச்சல்களைக் குறைக்க முடியும். 

by   on 16 May 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.