LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை நிகழ்ந்து உள்ளது. மசோதாக்கள் விவரம் .:


1) ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்து ஜம்மு-காஷ்மீரை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றும் மசோதா.

2) உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-ல் இருந்து 34 ஆக அதிகரிக்கும் மசோதா.

3) நுகர்வோர்களின் உரிமைகளை வரையறை செய்து அவர்களின் உரிமைகள் மீறப்படுவதை தடுக்க, குறை தீர்க்கும் அமைப்புகளை உருவாக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றைய அமைக்கவும் வகை செய்யும் மசோதா.

4) பொது வளாகங்கள் (சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றம்) சட்ட திருத்த மசோதா.  இது அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற தேவையான வழிமுறைகளை தெளிவுபடுத்தும் மசோதா.

5) சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா: சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு அளிப்பது லைசென்ஸ் பெற, பதிவு செய்ய உள்ள விதிமுறைகளில் மாற்றம் ஆகியவகைகளுக்கான கொள்கைகளை வகுக்கிறது.

6) மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை ஒழுங்குபடுத்த தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக ஒரு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா.

7) குறைந்தபட்ச கூலிச்சட்டம் 1948, கூலி அளித்தல் சட்டம் 1936, போனஸ் அளித்தல் சட்டம் 1965 மற்றும் சம ஊதிய சட்டம் 1976 ஆகிய சட்டங்களை ஒருங்கிணைக்கும் மசோதா.

8) பயன்பாட்டில் இல்லாத 58 சட்டங்களை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா. இவற்றில் 46 அடிப்படை சட்டங்கள், 12 திருத்தப்பட்ட சட்டங்கள் அடங்கும்.

9) சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட திருத்த மசோதா:பயங்கரவாத குற்றங்களை புலனாய்வு செய்யவும், வழக்கு தொடரவும் நடைமுறையில் உள்ள சட்டத்தை திருத்த வகை செய்கிறது.

10) இந்திய விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சட்ட திருத்த மசோதா: பெரிய விமான நிலையங்களை வகைப்படுத்தும் வரம்பை அதிகரித்து குறிப்பிட விமான நிலையங்களுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்ய வழிமுறைகளை ஏற்படுத்துகிறது.

11) ஒரு நிறுவனத்தை திவால் செய்ய காலக்கெடு விதித்து, கடன் கொடுத்தவர்களுக்கு குறைந்தபட்ச தொகை கிடைக்க வகை செய்யும் மசோதா.

12)  பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட திருத்த மசோதா. இதன் மூலம்குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுகான தண்டனைகள் கடுமையாகின்றன.

13)  நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான சட்ட திருத்த மசோதா: நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான சட்டம் 1996-ல் திருத்தம் செய்து இந்திய சமரச கவுன்சில் என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்க வகை செய்கிறது. 

14) கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா: கடன்களை செலுத்தாத பிரிவில் சில குற்றங்களை மறு வரையறை செய்கிறது. சில ஒப்புதல் அளிக்கும் அதிகாரங்களை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் இருந்து மத்திய அரசுக்கு மாற்ற வகை செய்கிறது.

15) முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா:எழுத்துப்பூர்வமான, எலக்ட்ரானிக் வடிவ மற்றும் அனைத்து வகையான உடனடி முத்தலாக் பிரகடனங்கள் அனைத்தும் செல்லாது மற்றும் சட்ட விரோதமானவை என்று ஆக்குகிறது.

 16) ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை தடை செய்ய ஒரு அமைப்பை உருவாக்கி டெபாசிட்தாரர்களின் நலன்களை பாதுகாக்க வகை செய்யும் மசோதா.

17) தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா:  மத்திய, மாநில தகவல் ஆணையர்களின் சம்பளம், பதவிகளுக்கான காலக்கெடு மற்றும் விதிமுறைகளை திருத்த வகை செய்கிறது.

18) தேசிய புலனாய்வு நிறுவன சட்ட திருத்த மசோதா: இம் மசோதா, தேசிய புலனாய்வு நிறுவனத்தின் அதிகார வரம்பையும், அதன் விசாரணைக்கு உட்பட்ட குற்றங்களின் பட்டியலையும் மாற்றி அமைத்து செயல்பாட்டில் உள்ள சட்டங்களை திருத்தி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வகை செய்கிறது.

19) மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை வரைமுறை செய்து அதன் நிர்வாகம் மற்றும் நிதிநிலை சம்பந்தப்பட்ட அதிகாரங்களை அதன் செயலாளருக்கு அளிக்க வகை செய்யும் மசோதா.

20)  தன்னாட்சி அதிகாரம் பெற்ற தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஒரு சமரச மையத்தை உருவாக்கி இந்தியாவில் சமரச செயல்பாடுகளை மேலாண்மை செய்ய வகை செய்யும் மசோதா. (இந்த மையம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு என்று வகைப்படுத்தப்படும்.

21) ஆந்திரப்பிரதேசத்தில் ஒரு புதிய மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் மசோதா.

22) பல் மருத்துவர்கள் சட்டம், 1948-ன் கீழ் உருவாக்கப்பட்ட பல் மருத்துவ கவுன்சில்களில் இருந்து சில வகை பல் மருத்துவர்களின் பிரதிநிதிகளை நீக்க வகை செய்யும் மசோதா.

23) ஆதார் விவரங்களை இணையம் அல்லாத முறையில் சரிபார்க்க வகை செய்யும் மசோதா. ஒருவர் வங்கி மற்றும் தொலைபேசி சேவைகள் பெற தேவையான தகவல்களை அளிக்க, ஆதார் எண்ணைத் தன்னிச்சையாக அளிக்க இது வகை செய்கிறது.

24) இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை இரண்டு வருடங்களில் உருவாக்க வகை செய்யும் மசோதா.

25) மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், சமூகரீதியாக கல்விரீதியாக பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரரீதியாக பலவீனமாக பிரிவினர் ஆகியோர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா.

26) ஹோமியோபதிக்கான மத்திய கவுன்சில் சட்ட திருத்த மசோதா:மத்திய கவுன்சிலை மாற்றி அமைக்க அளிக்கப்படும் காலக்கெடுவை ஒரு வருடத்தில் இருந்து இரண்டு வருடங்களாக மாற்ற வகை செய்கிறது.

27) ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா 2019:  பன்னாட்டு எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வசிப்பவர்களுக்கு இணையாக இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது.

28) சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் 2015-ல் திருத்தம் செய்து தனி நபர் என்ற வரைமுறையில் மேலும் இரண்டு பிரிவினரை சேர்க்கவகை செய்யும் மசோதா.

29) நிதிநிலை மசோதா (எண் 2): 2019-20-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை முன்மொழிவுகளை செயல்படுத்த வகை செய்கிறது.

30) நிதி ஒதுக்கீடு (எண் 2) மசோதா  தொகுக்கப்பட்ட இந்திய நிதியில் இருந்து செலவுகளை செய்ய அதிகாரம் அளிக்கிறது.

மேற்கண்டவை உள்பட 36 மசோதாக்கள் 2019 பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் 67 நாட்களில் 36 மசோதாக்கள் என்பது சாதனையாகக் கருதப்படுகின்றது.

by Mani Bharathi   on 13 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.