|
||||||||||
மானுடம் போற்றும் மனிதநேயம் வாழும் மகத்துவமிகு மாதா ட்ரஸ்ட் |
||||||||||
"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்"
உங்கள் திருமண நாள், உங்கள் குழந்தைகள்/பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் பாசம் மிகுந்த உங்கள் பெற்றோர்களின் நினைவு நாட்களில், கொடிய புற்று நோயினால் உயிருக்குப் போராடும் ஏழை நோயாளிகளுக்கு, வயிறார உணவளித்து அவர்கள் வியாதிக்கு தரம் வாய்ந்த சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனையில் இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ சிகிச்சை பெற உதவ நீங்கள் விரும்புகிறீர்களா? “புற்றுநோய்” - சரியான நேரத்தில் முறையான சிகிச்சையளித்தால் நிச்சயம் குணப்படுத்தலாம். புற்றுநோயால் அவதியுறும் ஏழைகள் குணமாக உதவி செய்ய, எங்களுக்கு உதவுங்கள் ஏழையின் சிரிப்பே இறவனின் கருணை! நன்றே செய்க! அதை இன்றே செய்க!! இது சான்றோர் வாக்கு. இந்த சிறந்த சேவைக்கு ரூ.100,000 நிதி கொடுத்து, நீங்கள் ஒரு நிரந்தர காப்பாளர் ஆகலாம். இங்கு தங்கும் 250 முதல் 300 நோயாளிகளுக்கு ஒரு முழு நாள் உணவை ஆண்டுக்கு ஒருமுறை வழங்க ரூ.75,000 கொடுத்து நீங்கள் ஒரு வள்ளல் ஆகலாம். இந்த தொகை டிரஸ்டின் காப்பு நிதியில் சேர்க்கப்பட்டு, அதன் வட்டியிலிருந்து இந்த தர்மம் செய்யப்படும். ஒரு நாள் சாப்பாடு செலவின் ஒரு பகுதியான ரூ.8000 அளிக்கலாம். காலை/இரவு உணவுக்காக ரூ.3000 அல்லது சிற்றுண்டிக்கு ரூ.2000 தந்து உதவலாம். மாதம் ஒரு நோயாளிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஒரு வருடத்திற்கு ரூ.1000 கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு நோயாளியின் உணவுக்காக ரூ.80 அளிக்கலாம். |
||||||||||
by Swathi on 22 Sep 2011 0 Comments | ||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|