LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

செயற்கை நுண் அறிவாற்றல் துறையில் இந்தியாவுக்கு 13-வது இடம்!

செயற்கை நுண்அறிவாற்றல் (artificial intelligence) எனப்படும் துறையில் இந்தியா, 13 -வது இடம் பிடித்து உள்ளது. 

கணினியை கட்டமைப்பது, கணினியால் உருவாக்கப்படும் ரோபோக்களை உருவாக்குவது, அல்லது மனித மூளை சிந்திப்பதைப் போல் மென்பொருள் ஒன்றை இயங்கச் செய்வது போன்ற அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகள் செயற்கை நுண்அறிவாற்றல் என்று அழைக்கப்படுகிறது.

பின்லாந்து நாட்டின் ஏஐ (AI) வல்லுனர்கள் குழுவான சைப்ஃபிரா (zyfra) 200 நாடுகளையும் 50 புகழ்பெற்ற அறிவியல் இதழ்களையும் வைத்து நடத்திய ஆய்வில் செயற்கை நுண்அறிவாற்றல் துறையின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 

இதில் முதல் இடத்தில் அமெரிக்காவும், அதற்கு அடுத்த இடத்தில் சீனாவும் உள்ளன. இதில் கனடாவிற்கு அடுத்ததாக 13-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 

மேலும் அறிவியல் ஆய்வுகளை நடைமுறைபடுத்துவதற்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு கட்ட முயற்சிகள் குறித்தும் இந்த ஆய்வு விவரித்துள்ளது. 

செயற்கை நுண்ணறிவு இப்போது பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோபாட்டிக்ஸ் துறை AI தொடர்பான துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

மேலும் இவை பொருட்களை கையாளுதல் மற்றும் ஊடுருவல் போன்ற பணிகளை கையாளுவதற்கு பயன்படுகிறது. செயற்கை நுண்அறிவாற்றல் உதவியுடன் கார்களை இயக்கும் வகையில் பல்வேறு வசதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

by Mani Bharathi   on 17 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.