|
||||||||
அருள் வெள்ளம் |
||||||||
நமது வாழ்க்கையின் நோக்கம் அமைதியும் நிறைவும் பெற்று வாழ்வதோடு ஆன்ம வளர்ச்சி பெற வேண்டும் என்பதேயாகும். ஆன்ம வளர்ச்சியை முதற் குறிக்கோளாகக் கொண்டால் பிறவெல்லாம் அற்பமாகவே தோன்றும். மனதை நிறை நிலையில் வைத்துக் கொள்வோம். கடமையின் மதிப்புணர்ந்து செயலாற்றி வாழ்வோம்.
உண்மையிலேயே ஆன்ம வளர்ச்சியை வேண்டுபவர் சிக்கல்களையும், பிணக்குகளையும் தாண்டி, அறிவைச் சுதந்திரமாக இயங்க விட வேண்டும். விரிந்த பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளையும், மனித வாழ்வையும் இணைத்து ஒத்துச் சிந்தியுங்கள். தன்முனைப்பு என்ற திரை கரைந்து விடும். தன் முனைப்பும், இயற்கை நியதியறியாமையும் ஒன்றை ஒன்று தழுவி நிலைத்திருக்கின்றன.
இதனால் மனிதன் தன்னிடம் ஒரு கற்பனை மதிப்பை (False Prestige) உருவாக்கிக் கொள்ளுகிறான். இந்த மருள் கொண்ட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பிறரை ஒப்பு நோக்கும் போது கருத்தில் வேறுபாடுகளும், பிணக்குகளும் எழுகின்றன. தனது மனதைச் சீரமைத்துக் கொண்டு எவரை எக்கருத்தைத் தன்னோடு ஒப்பு நோக்கினாலும், ஒரு சமநிலை உணர்வு உண்டாகும். இந்த உணர்வில் தான் பேரின்பம் தொக்கி நிற்கின்றது. இப்பேருணர்வே அருள் வெள்ளமாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நமது வாழ்க்கையின் நோக்கம் அமைதியும் நிறைவும் பெற்று வாழ்வதோடு ஆன்ம வளர்ச்சி பெற வேண்டும் என்பதேயாகும். ஆன்ம வளர்ச்சியை முதற் குறிக்கோளாகக் கொண்டால் பிறவெல்லாம் அற்பமாகவே தோன்றும். மனதை நிறை நிலையில் வைத்துக் கொள்வோம். கடமையின் மதிப்புணர்ந்து செயலாற்றி வாழ்வோம்.
உண்மையிலேயே ஆன்ம வளர்ச்சியை வேண்டுபவர் சிக்கல்களையும், பிணக்குகளையும் தாண்டி, அறிவைச் சுதந்திரமாக இயங்க விட வேண்டும். விரிந்த பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளையும், மனித வாழ்வையும் இணைத்து ஒத்துச் சிந்தியுங்கள். தன்முனைப்பு என்ற திரை கரைந்து விடும். தன் முனைப்பும், இயற்கை நியதியறியாமையும் ஒன்றை ஒன்று தழுவி நிலைத்திருக்கின்றன.
இதனால் மனிதன் தன்னிடம் ஒரு கற்பனை மதிப்பை (False Prestige) உருவாக்கிக் கொள்ளுகிறான். இந்த மருள் கொண்ட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பிறரை ஒப்பு நோக்கும் போது கருத்தில் வேறுபாடுகளும், பிணக்குகளும் எழுகின்றன. தனது மனதைச் சீரமைத்துக் கொண்டு எவரை எக்கருத்தைத் தன்னோடு ஒப்பு நோக்கினாலும், ஒரு சமநிலை உணர்வு உண்டாகும். இந்த உணர்வில் தான் பேரின்பம் தொக்கி நிற்கின்றது. இப்பேருணர்வே அருள் வெள்ளமாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
|
||||||||
by Swathi on 18 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|