LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

அருட்பத்து - மகாமாயா சுத்தி

 

சோதியே சுடரே சூழொளி விளக்கே 
சுரிசூழற் பணைமுலை மடந்தை 
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் 
பங்கயத் தயனுமா லறியா 
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் 
நிறைமலர்க் குருந்தமே வியசீர் 
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என் றரு ளாயே. 458 
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் 
கண்ணனே விண்ணுளோர் பிரானே 
ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி 
உலகெலாந் தேடியுந் காணேன் 
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 459 
எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா 
ஏலவார் குழலிமார் இருவர் 
தங்கள் நாயகனே தக்கநற்காமன் 
தனதுடல் தழலெழ விழித்த 
செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றருளாயே. 460 
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக் 
கண்ணனும் நண்ணுதற்கரிய 
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன 
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் 
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 461 
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை 
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு 
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு 
பொங்கொளி தங்குமார் பின்னே 
செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 462 
துப்பனே தூயாய் தூயவெண்ணீறு 
துதைந்தெழு துளங்கொளி வயிரத் 
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின் 
உறுசுவை துளிக்கும் ஆரமுதே 
செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 463 
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா 
மேலவர் புரங்கள் மூன்றெரித்த 
கையனே காலாற் காலனைத் காய்ந்த 
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் 
செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 464 
முத்தனே முதல்வா முக்கணா முனிவா 
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் 
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் 
பரகதி கொடுத்தருள் செய்யுஞ் 
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 465 
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி 
மறுமையோ டிம்மையுங் கெடுத்த 
பொருளணே புனிதா பொங்குவா ளரவங் 
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் 
தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால் 
அதெந்துவே என்றரு ளாயே. 466 
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் 
செழுமலர்க் குருந்தமே வியசீர் 
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் 
டென்னுடை யெம்பிரான் என்றென் 
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் 
அலைகடல் அதனுளே நின்று 
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் 
போதராய் என்றளு ளாயே. 467 

 

சோதியே சுடரே சூழொளி விளக்கே 

சுரிசூழற் பணைமுலை மடந்தை 

பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் 

பங்கயத் தயனுமா லறியா 

நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் 

நிறைமலர்க் குருந்தமே வியசீர் 

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என் றரு ளாயே. 458 

 

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் 

கண்ணனே விண்ணுளோர் பிரானே 

ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி 

உலகெலாந் தேடியுந் காணேன் 

திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றரு ளாயே. 459 

 

எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா 

ஏலவார் குழலிமார் இருவர் 

தங்கள் நாயகனே தக்கநற்காமன் 

தனதுடல் தழலெழ விழித்த 

செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றருளாயே. 460 

 

கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக் 

கண்ணனும் நண்ணுதற்கரிய 

விமலனே எமக்கு வெளிப்படா யென்ன 

வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் 

திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றரு ளாயே. 461 

 

துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை 

துணைமுலைக் கண்கள்தோய் சுவடு 

பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு 

பொங்கொளி தங்குமார் பின்னே 

செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றரு ளாயே. 462 

 

துப்பனே தூயாய் தூயவெண்ணீறு 

துதைந்தெழு துளங்கொளி வயிரத் 

தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின் 

உறுசுவை துளிக்கும் ஆரமுதே 

செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றரு ளாயே. 463 

 

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா 

மேலவர் புரங்கள் மூன்றெரித்த 

கையனே காலாற் காலனைத் காய்ந்த 

கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் 

செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றரு ளாயே. 464 

 

முத்தனே முதல்வா முக்கணா முனிவா 

மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் 

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் 

பரகதி கொடுத்தருள் செய்யுஞ் 

சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றரு ளாயே. 465 

 

மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி 

மறுமையோ டிம்மையுங் கெடுத்த 

பொருளணே புனிதா பொங்குவா ளரவங் 

கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் 

தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால் 

அதெந்துவே என்றரு ளாயே. 466 

 

திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் 

செழுமலர்க் குருந்தமே வியசீர் 

இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் 

டென்னுடை யெம்பிரான் என்றென் 

றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் 

அலைகடல் அதனுளே நின்று 

பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் 

போதராய் என்றளு ளாயே. 467 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.