டெல்லி - சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் குழுவில் உறுப்பினராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் இன்று தமது அரசியல் கட்சியைத் தொடங்குகிறார். ஊழலை ஒழிப்போம் என்று களம் இறங்கியவர் அன்னா ஹசாரே. அவருடன் கூட்டு சேர்ந்தவர்களில் அர்விந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, கிரண் பேடி போன்றோரும் அடக்கம். தொடக்கத்தில் மக்களிடத்தில் ஆதரவு பெற்றிருந்த அன்னா ஹசாரே, பின்னர் கிடைத்த ஆதரவை படிப்படியாக இழந்தார். சில விஷயங்களில் ஹசாரே செய்த தவறுகளால் மக்களின் ஆதரவு சட்டென்று குறைந்துபோய்விட்டது. அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டிய அர்விந்த் கெஜ்ரிவாலிடம் ஒருகட்டத்தில் ஹசாரே கட்சி தொடங்காவிட்டாலும் தாம் தொடங்கிவிடுவது என்று முடிவெடுத்தார். இதில் அன்னா ஹசாரேவுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. ஆத்திரத்தில் தமது பெயரையும் படத்தையும் கெஜ்ரிவால் குழு பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார். இதனால் அன்னா ஹசாரே குழு இரண்டாக உடைந்தது. இந்தநிலையில் கெஜ்ரிவால் தம் நீண்ட நாள் ஆசைப்படி இன்று அரசியல் கட்சியைத் துவங்குகிறார்.
|