சமையல் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் தொடர்பாக, பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, முகேஷ் அம்பானி நிறுவனம் மீது வழக்கு தொடர போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று டெல்லி தலைமை செயலகத்தில நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் இயற்கை எரி வாயு விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை மடங்கு லாபம் கிடைக்கிறது. இது மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு சமம். அந்நிறுவனம் அதிக கொள்ளை அடித்துள்ளது. இதற்கு பெட்ரோலிய துறை அமைச்சர்கள் துணை போய் இருக்கின்றனர். நாட்டில் நடக்கும் ஊழல்கள் விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இதன்படி பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் தியோரா, முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதியப்படும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
|