பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து, ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படம் கடம்பன். இந்த படத்தை மஞ்சப்பை படத்தின் இயக்குநர் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யாவிற்கு ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடித்துள்ளார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துவரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
கடம்பன் படத்தின் இறுதி கட்ட படபிடிப்பிற்காக, படக்குழுவினர் தாய்லாந்துக்கு செல்ல உள்ளனர். தாய்லாந்து நாட்டின் சியாங் மை என்ற பகுதியில் வரும் ஜுலை 1ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனால் முன்கூட்டியே ஆர்யாவும், இயக்குநர் ராகவனும் செல்லவிருக்கிறார்கள். ஏனென்றால், க்ளைமேக்ஸ் காட்சியில் ஆர்யா, யானைகளுடன் நடிக்கவிருப்பதால், அதற்கான பயிற்சிக்காக முன்கூட்டியே செல்கிறார்களாம்.
தாய்லாந்தின் யானைப் பண்ணையிலுள்ள 300க்கும் மேற்பட்ட யானைகளிலுருந்து 50 யானைகளை படப்பிடிப்பிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஐம்பது யானைகளுடன் ஆர்யா க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கவிருக்கிறார். அதனால் யானையை எப்படி கட்டுப்படுத்துவது, அதனுடன் பழகுவது சார்ந்த பயிற்சிக்காகவே ஆர்யா செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. க்ளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் ஐந்து கோடி பட்ஜெட் ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியும் அடுத்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முடியும் என சொல்லப்படுகிறது.
|