|
||||||||
அசைக்கும் சீர்க்கும் புறனடை |
||||||||
சீர்முதல் நெடிலசை சிறப்பொடு நடக்கும்
சீர்முதல் குறிலசை சிறுவர விற்றே.
கருத்து : சிந்துப் பாடல்களில் உள்ள சீர்களின் முதலில் வரும் நெடிலசைகள் சிறப்பொடு நடக்கும். சீர்களின் முதலில் வரும் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
விளக்கம் : நெடிலசை என்பன குறிலொற்றாகவும், நெடிலாகவும் நெடிலொற்றாகவும் வருவன.
ஓரசையாகவோ, ஈரசையாக நீண்டோ வரும் நெடிலசைகள் சிறப்பசைகள் என்பது முன்னர் கூறப்பட்டது. (நூ. 12)
அதுவன்றியும் ஓசை மிக்க எழுத்துகளாகப் பேராசிரியரால் குறிப்பிடப்படுவன நெட்டெழுத்தும், அந்நெட்டெழுத்துப் போல் ஓசையெழும் மெல்லெழுத்தும், லகார, ளகாரங்களுமே (தொ, பொருள், செய், பேரா, உரை. சூ..242)
எனவே நெட்டெழுத்துகள் ஓசை மிக்கன என்பது தெளிவு. ஆகவே சிறப்பசை என்று சிறப்பிக்கப்பட்ட குறிலொற்றும், நெடிலும், நெடிலொற்றும் சிந்துப் பாடலின் சீர்களில் முதலசையாக வரின் அப்பாடல் ஓசைச் சிறப்புடையதாக இருக்கும்.
சீர்த் தொடக்கத்தில் வரும் குறிலசைகள் சிறப்பிலசைகள். ஆகவே சீர்முதலில் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலில் ஓரசைக்குமேல் நீளாத அசைகளை உடைய சீர்கள் 48 உள்ளன. (தனிச் சொற்களும் அரையடி இறுதிகள், அடியிறுதிகளில் உள்ள அசை நீட்டங்களும் நீங்கலாக) அவற்றில் முதலசைகளாக ‘க’ ‘ன’ ‘ரு’ என்ற மூன்று குறிலசைகளே உள்ளன. ஏனைய 45 முதலசைகளும் நெடிலசைகளாய் உள்ளன.
எனவே சிந்துப் பாடல்களில் சீர்முதலில் நெடிலசைகள் வரின் பாடல் சிறக்கும் என்பதும், சீர்முதல் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும் என்பதும் தெளிவாகின்றன.
----
22.
ஒருபாட் டிடையே ஒருநடை அன்றி வேறொரு நடைச்சீர் விரிவுதல் அரிதே.
கருத்து : சிந்துப் பாடல்களில் மும்மை நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றில் யாதேனுமொரு நடையில் இயங்குமொரு பாடலில் அப்பாடலின் நடைக்குரிய சீர்களே அமைந்திருக்கும். அப்பாடலின் நடுவில் அப்பாடலின் நடைக்குரிய சீரன்றி வேறொரு நடைக்குரிய சீர் கலந்து வருதல் அரிய வழக்காகும்.
விளக்கம் : ஒரு பாடல் மும்மை நடைப் பாடலாயின் ஒவ்வொரு முழுச்சீரிலும் மும்மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம் (முழுச்சீர் என்பது முழுவதும் எழுத்துகளால் அசை வரக்கூடிய இடங்களில் வரும் சீர் - ‘ஆறுமுக’ என்ற பாடலில் அடி, அரையடிகளில் முற்பாதியில் நான்கு சீர்களும் பிற்பாதியில் வரும் முதலிரண்டு சீர்களும் முழுச்சீர்கள்). அவை தனி உயிராகவோ மெய்யின் மேலேறிய உயிராகவோ இருக்கும்.
ஆறுமுக என்ற பாடல் மும்மை நடைப்பாடல். மும்மை நடைக்குரிய சீர்களே பாடல் முழுவதும் உள்ளன. அதே போன்று ‘தெள்ளுதமிழுக்கு’ என்ற நான்மை நடைப்பாடலில் நான்மைச் சீர்களும், ‘சீர்வளர் பசுந்தோகை’ என்ற ஐம்மை நடைப்பாடலில் ஐம்மை நடைச்சீர்களும், ‘பொன்னுலவு’ என்ற எழுமை நடைப் பாடலில் எழுமை நடைக்குரிய சீர்களும் பாடல் முழுவதும் வருவதை உணரலாம்.
ஒரு பாட்டினிடையே ஒருநடைச் சீரன்றி வேறொரு நடைச்சீர் விரவாமல் வருவது பெருவழக்கு. மிகவும் அரிதான ஒரு பாட்டினிடையே அப்பாட்டின் தாள நடைச்சீரன்றி வேறொரு தாளநடைச் சீர் வருதல் உண்டு. அ·து அரிய வழக்காதலால், ‘விரவுதல் அரிதே’ என்றார் ஆசிரியர்.
காட்டு : கலப்பு நடை (ஐம்மை + எழுமை)
திருவு . ற்றி லகுகங் . க வரையி.ற்பு கழ்மிகுந் . த
திகழ . த்தி னமுறைந் . த வா . ச . னை - மிகு
மகிமை . ச்சு கிர்ததொண் . டர் நே . ச . னைப்- . ப . ல .
தீயபாதக காரராகிய
சூரர்யாவரு மாளவேயொரு
சிகர . க்கி ரிபிளந் . த வே . ல . னை- உ . மை .
தகர . க்கு ழல்கொள்வஞ் . சி பா . ல . னை .
மருவு . ற்றி ணர்விரிந் . து மதுப . க்கு லமுழ . ங் . க
மதுமொய் . த்தி டுகடம் . ப ஆ . ர . னை - . வி . க .
சிதசி . த்ர சிகிஉந் . து வீ . ர . னை - . எ . ழில் .
மாகநாககு மாரியாகிய
மாதினோடுகி ராதநாயகி
மருவ . ப்பு ளகரும் . பு தோ . ள . னை - . எ . னை .
அருமை . ப்ப ணிகொளும் . த யா . ள . னை . -
(கா. சி. க. வ. ப. 1131)
இதில் ‘தீயபாதக’ ‘மாகநாககு’ என்று வரும் முடுகியல் சீர்கள் நான்கும் எழுமை நடையிலும் ஏனைய சீர்கள் ஐம்மை நடையிலும் நடப்பதைப் பாடியுணரலாம்.
சீர்முதல் நெடிலசை சிறப்பொடு நடக்கும் சீர்முதல் குறிலசை சிறுவர விற்றே. கருத்து : சிந்துப் பாடல்களில் உள்ள சீர்களின் முதலில் வரும் நெடிலசைகள் சிறப்பொடு நடக்கும். சீர்களின் முதலில் வரும் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
விளக்கம் : நெடிலசை என்பன குறிலொற்றாகவும், நெடிலாகவும் நெடிலொற்றாகவும் வருவன.
ஓரசையாகவோ, ஈரசையாக நீண்டோ வரும் நெடிலசைகள் சிறப்பசைகள் என்பது முன்னர் கூறப்பட்டது. (நூ. 12)
அதுவன்றியும் ஓசை மிக்க எழுத்துகளாகப் பேராசிரியரால் குறிப்பிடப்படுவன நெட்டெழுத்தும், அந்நெட்டெழுத்துப் போல் ஓசையெழும் மெல்லெழுத்தும், லகார, ளகாரங்களுமே (தொ, பொருள், செய், பேரா, உரை. சூ..242)
எனவே நெட்டெழுத்துகள் ஓசை மிக்கன என்பது தெளிவு. ஆகவே சிறப்பசை என்று சிறப்பிக்கப்பட்ட குறிலொற்றும், நெடிலும், நெடிலொற்றும் சிந்துப் பாடலின் சீர்களில் முதலசையாக வரின் அப்பாடல் ஓசைச் சிறப்புடையதாக இருக்கும்.
சீர்த் தொடக்கத்தில் வரும் குறிலசைகள் சிறப்பிலசைகள். ஆகவே சீர்முதலில் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலில் ஓரசைக்குமேல் நீளாத அசைகளை உடைய சீர்கள் 48 உள்ளன. (தனிச் சொற்களும் அரையடி இறுதிகள், அடியிறுதிகளில் உள்ள அசை நீட்டங்களும் நீங்கலாக) அவற்றில் முதலசைகளாக ‘க’ ‘ன’ ‘ரு’ என்ற மூன்று குறிலசைகளே உள்ளன. ஏனைய 45 முதலசைகளும் நெடிலசைகளாய் உள்ளன.
எனவே சிந்துப் பாடல்களில் சீர்முதலில் நெடிலசைகள் வரின் பாடல் சிறக்கும் என்பதும், சீர்முதல் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும் என்பதும் தெளிவாகின்றன. ---- 22. ஒருபாட் டிடையே ஒருநடை அன்றி வேறொரு நடைச்சீர் விரிவுதல் அரிதே. கருத்து : சிந்துப் பாடல்களில் மும்மை நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றில் யாதேனுமொரு நடையில் இயங்குமொரு பாடலில் அப்பாடலின் நடைக்குரிய சீர்களே அமைந்திருக்கும். அப்பாடலின் நடுவில் அப்பாடலின் நடைக்குரிய சீரன்றி வேறொரு நடைக்குரிய சீர் கலந்து வருதல் அரிய வழக்காகும்.
விளக்கம் : ஒரு பாடல் மும்மை நடைப் பாடலாயின் ஒவ்வொரு முழுச்சீரிலும் மும்மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம் (முழுச்சீர் என்பது முழுவதும் எழுத்துகளால் அசை வரக்கூடிய இடங்களில் வரும் சீர் - ‘ஆறுமுக’ என்ற பாடலில் அடி, அரையடிகளில் முற்பாதியில் நான்கு சீர்களும் பிற்பாதியில் வரும் முதலிரண்டு சீர்களும் முழுச்சீர்கள்). அவை தனி உயிராகவோ மெய்யின் மேலேறிய உயிராகவோ இருக்கும்.
ஆறுமுக என்ற பாடல் மும்மை நடைப்பாடல். மும்மை நடைக்குரிய சீர்களே பாடல் முழுவதும் உள்ளன. அதே போன்று ‘தெள்ளுதமிழுக்கு’ என்ற நான்மை நடைப்பாடலில் நான்மைச் சீர்களும், ‘சீர்வளர் பசுந்தோகை’ என்ற ஐம்மை நடைப்பாடலில் ஐம்மை நடைச்சீர்களும், ‘பொன்னுலவு’ என்ற எழுமை நடைப் பாடலில் எழுமை நடைக்குரிய சீர்களும் பாடல் முழுவதும் வருவதை உணரலாம்.
ஒரு பாட்டினிடையே ஒருநடைச் சீரன்றி வேறொரு நடைச்சீர் விரவாமல் வருவது பெருவழக்கு. மிகவும் அரிதான ஒரு பாட்டினிடையே அப்பாட்டின் தாள நடைச்சீரன்றி வேறொரு தாளநடைச் சீர் வருதல் உண்டு. அ·து அரிய வழக்காதலால், ‘விரவுதல் அரிதே’ என்றார் ஆசிரியர்.
காட்டு : கலப்பு நடை (ஐம்மை + எழுமை) திருவு . ற்றி லகுகங் . க வரையி.ற்பு கழ்மிகுந் . த திகழ . த்தி னமுறைந் . த வா . ச . னை - மிகு மகிமை . ச்சு கிர்ததொண் . டர் நே . ச . னைப்- . ப . ல . தீயபாதக காரராகிய சூரர்யாவரு மாளவேயொரு சிகர . க்கி ரிபிளந் . த வே . ல . னை- உ . மை . தகர . க்கு ழல்கொள்வஞ் . சி பா . ல . னை . மருவு . ற்றி ணர்விரிந் . து மதுப . க்கு லமுழ . ங் . க மதுமொய் . த்தி டுகடம் . ப ஆ . ர . னை - . வி . க . சிதசி . த்ர சிகிஉந் . து வீ . ர . னை - . எ . ழில் . மாகநாககு மாரியாகிய மாதினோடுகி ராதநாயகி மருவ . ப்பு ளகரும் . பு தோ . ள . னை - . எ . னை . அருமை . ப்ப ணிகொளும் . த யா . ள . னை . - (கா. சி. க. வ. ப. 1131) இதில் ‘தீயபாதக’ ‘மாகநாககு’ என்று வரும் முடுகியல் சீர்கள் நான்கும் எழுமை நடையிலும் ஏனைய சீர்கள் ஐம்மை நடையிலும் நடப்பதைப் பாடியுணரலாம்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|