அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நாளை முதல், செப்டம்பர் - 13ம் தேதி வரை, 84 கி.மீ., தூரத்திற்கு, அயோத்தியிலிருந்து யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. இந்த யாத்திரைக்கு உத்திர பிரதேச அரசு தடை விதித்தது. இதனை அடுத்து, திட்டமிட்ட படி யாத்திரை தொடங்கும் எனவும், தடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விஸ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு எதிராக, பைசாபாத் மாவட்ட நிர்வாகம் கைது வாரன்ட் பிறப்பித்தது. நேற்றிரவு வரை, இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; சிலர் தலைமறைவாகி உள்ளனர். பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால், அலகாபாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அயோத்தியில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
|