காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர் குறைந்த விலையிலேயே முழு சாப்பாடு கிடைப்பதாக கூறி நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்நிலையில், மீண்டும் ஒரு காங்கிரஸ் அமைச்சர் 20 ரூபாயில் 8 பேர் சாப்பிடலாம் என கூறியிருப்பது, பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் நிலோமணி சென் டீகா. இவர் அசாம் மாநிலத்தில் 20 ரூபாயில் 8 பேர் சாப்பிடலாம் எனவும் இதை ஒரு வாரத்திற்குள் நிருபிக்க போவதாகவும் அவர் அறிக்கை விடுத்துள்ளார். இதற்கு அசாம் மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், பல இடங்களில் அவருடைய உருவ பொம்மைகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
|