LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள், தென்னக புயல் பாதிப்பு மீட்புக் குழு சென்னையில் ஆலோசனைக் கூட்டம்.

தென்னக புயல் பாதிப்பு மீட்புக் குழு சென்னை அண்ணா நகரில் உள்ள அரினா அரங்கத்தில் கூடி தஞ்சை, நாகை, வேளாங்கன்னி, புதுக்கோட்டை முதலிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய நிதி திரட்டியும், பொருள்கள் வாங்கியும் பங்கிட்டு வழங்க தொண்டர்களை திரட்டியும் ஆலோசனைக் கூட்டம் 'பிரிசியா மோலன் ' நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

புதுக்கோட்டை சேர்ந்த திருமதி. தங்கள் ஊரில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அழிவு பற்றி கூறி கண்ணீர் வடித்தார். மன்னார்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்த்து தேவைகளை அறிந்து வந்த மருத்துவர் பானுப்பிரியா நேரு பேசினார். நடிகர் யார்க் கண்ணன் அவர்கள் கவிதை படித்தார். காளையோடு விளையாடிய இளைஞர்கள் இப்போது காளைகள் இறந்து கிடக்கும் போதும் திரண்டு வர வேண்டாமா என கேட்டார். நடிகர் ராஜேஷ் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய நாம் நேரிடையாக செல்ல வேண்டும் என்றார்.

அடுத்து பேசிய தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலர் முனைவர் பா. இறையரசன் பேசுகையில் இதுவரை திரட்டப்பட்டுள்ள நிதி ரூபாய். 70,000 க்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான தார்ப் பாய், பால் பவுடர், கை விளக்கு ( டார்ச் லைட்), குடைகள் முதலியவற்றை நாளை வண்டியில் ஏற்றி அனுப்பவுள்ளதாக கூறினார். இதில் 'ஆக்கம்' மதிவாணன், திருமதி வடிவழகி, திருமதி சசிகலா, மருத்துவர் ரேணுகா, மருத்துவர் பத்மானந்தம், பாரதிதாசன், தினேஷ் போன்றோர் பாதிக்க பட்ட இடங்களுக்கு செல்கிறார்கள். 'அரினா அனிமேஷன்' திரு. சரவணராசா இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நன்னன் அய்யாவின் மருகர் தமிழியக்கம் செம்மல், இயக்குநர் கவுதமனின் தந்தையார் வடமலை மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

by Swathi   on 23 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.