|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-21-09-2015 |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர் : M.ரவி, S/o. S.முருகன் பிறந்த தேதி 19.03.1954 பிறந்த நேரம் காலை 7:30, பிறந்த இடம் : கோயம்பத்தூர், சூரிய மஹா திசை இருப்பு 4 வருஷம், 6மாதம் 18 நாள்
எனது சுய தொழில் மேலும் வளர்ச்சி அடையுமா? உடல் ஆரோக்யம் எப்படி இருக்கும்? ஆயுள் எவ்வளவு? எனது ஜாதகப்படி மனைவியின் உடல் ஆரோக்யம் எப்படி இருக்கும்? வீடு வாங்க வாய்ப்புண்டா? வெளிநாடு சென்று செட்டில் ஆகலாமா? மீன லக்னம் சிம்ம ராசி உத்தர நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது சனி தசையில் கேது புத்தி 27.07.2016 வரை நடப்பில் உள்ளது. சனி உங்கள் லக்னத்திற்கு 11,12 க்குடையவராகி அவர் 8ல் அமர்ந்து அவர் 10க்குடைய ராகு சாரம் பெறுவது சிறப்பாகும். அதே சமயம் சுய தொழில் இந்த கேது புத்தியில் சிறப்பாக இராது. சுக்ர புத்தி 27.07.2016-க்குப் பின் உங்களுக்கு வரும் காலங்களில் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். சுகரன் உங்கள் லக்னத்திற்கு 3.8க்குடைய சனி சாரம் பெற்று 8ம் வீட்டில் சனி அமர்வது ஆயுளுக்குத் தோஷத்தைக் காட்டும். ஆயுள் காரகளாகிய சனி 8ம் இடத்தில் இருப்பது ஒரு பக்கம் சிறப்பானது என்றாலும் சுக்ரன் சனி சாரம் பெற்று அவர் 8ல் இருப்பது உடல் ஆரோக்ய குறைவு. தீர்க்க முடியாத நோய்கள் மற்றும் ஆப்ரேஷன் இவற்றையெல்லாம் 8ம் இடம் குறிப்பிடும். ஜாதப்படி மனைவிகளுக்கும் அடிக்கடி உடல் ஆரோக்ய குறைவு விரையம், நஷ்டம், வைத்யச் செலவுகள் இவற்றைக் கொடுக்கும். எனவே மனைவியின் உடல் ஆரோக்யத்திலும் அதிகக் கவனம் தேவை. வீடு வாங்க இப்பொழுது வாய்ப்பு குறைவு. வீடு வாங்கினாலும் நீங்கள் அவ்வீட்டில் குடியிருக்க மாட்டீர்கள். வெளிநாடு சென்று தங்க வாய்ப்பில்லை. வருடம் ஒரு முறை திருக்கடையூர் “அபிராமி அம்மன்” கோயில் சென்று ஆயுஷ் ஹோமம் செய்து வரவும். -------- பெயர் C.ராம், S/o. சொக்கலிங்கம், பிறந்த தேதி 24-12-1985, பிறந்த நேரம் இரவு மணி 10:45, பிறந்த இடம் : திருச்செந்தூர், சந்திர மஹா தசை இருப்பு 9-6-9
எனது புதல்வனுக்கு உயர்கல்வி உண்டா? எப்பொழுது திருமணம் நடக்கும்? குழந்தை பாக்யம் உண்டா? பார்க்கும் கணக்கு வேலையில் வருமானம் வருமா? செவ்வாய் தோஷம் உண்டா? சிம்ம லக்னம் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு தற்பொழுது ராகு தசையில் சுக்ர புத்தி 19.01.2017 வரை நடப்பில் உள்ளது. ராகு இந்த லக்னத்திற்கு 4,9 க்குடையவராகி அவர் 9ல் அமர்ந்து அவர் 3க்குடைய கேது சாரம் பெறுவதால் உங்கள் புதல்வனுக்கு உயர்கல்வி உண்டு. 9ம் இடம் என்பது உயர் கல்வியையும் 3ம் இடம் என்பது பகுதி நேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ படிக்கும் படிப்பைக் குறிக்கும். எனவே இந்த தசையில் உங்கள் மகனுக்கு உயர்கல்வி படிக்க வாய்ப்பு உண்டு. திருமணம் இதுவரை நடக்காமல் இருந்ததே சரியாகும். எனெனில் இவரது மனைவி ஸ்தானமான 7ம் இடம் என்பது சனியாகும். இவர் 4ம் வீட்டில் தன் சாரத்திலே வலுவாக அமர்ந்திருப்பதால் திருப்தியற்ற மணவாழ்க்கை அமையும். எனவே இதுவரை திருமணம் நடக்காமல் இருந்ததே சரியாகும். நடந்திருந்தால் அது பிரிவினையைக் காட்டும். உங்கள் மகனுக்கு தார தோஷம் உண்டு. தாரதோஷம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைக் காட்டும். கண்டிப்பாக உங்கள் மகனுக்கு தற்பொழுது சுக்ர புத்தி நடக்கும் இக்காலங்களில் சனி அந்தரத்தில் 23.12.2015 to 14.06.2016க்குள் திருமணம் நடந்தேறும். அந்நியத்தில் பெண் அமைவாள். நன்கு படித்த வேலை பார்க்கும் பெண் அமைவாள். அவளால் உங்கள் புதல்வருக்கு சகாயம் மற்றும் ஆதாயம் உண்டு. செவ்வாய் தோஷம் இச்சாதகத்தில் இல்லை. குழந்தை பாக்யம் கண்டிப்பாக உண்டு. பார்க்கும் வேலையில் நல்ல வருமானம் வரும். “தேவிபட்டினம”, “கொடுமுடி” இரண்டு பரிகார ஸ்தலங்களுக்கும் சென்று பரிகாரம் செய்ய திருமணம் நடந்தேறும். - ஜோதிட இமயம் அபிராமி சேகர் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
by Swathi on 13 Oct 2015 2 Comments | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|