'நாடு முழுவதும் உள்ள, 6,000 ரயில் நிலையங்களில், அடுத்த நான்கு மாதங்களில், இலவச வை - பை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
டெல்லியில், ரயில்வே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, மத்திய ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் கூறியதாவது:
நாடு முழுவதும், 711 ரயில் நிலையங்களில், கூகுள் நிறுவன உதவியுடன், இலவச வை - பை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6,000 ரயில் நிலையங்களில், இலவச வை - பை வசதி வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அடுத்த நான்கு மாதங்களில் இந்தப் பணி முடிந்துவிடும். அதன் பின், ரயில் நிலையம் அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், இலவச வை - பை வசதி மூலம், தங்களுக்கு தேவையான தகவல்களை, கூகுளில் தேடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
|