LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 768 - படையில்

Next Kural >

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தானை - தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும் - பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும் - தன்தோற்றப்பொலிவானே பெருமை எய்தும். ('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.)
மணக்குடவர் உரை:
பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது படையழகினால் பெருமைபெறும்.படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
தறுகண் பேராண்மை என்ப - அஞ்சாதும் இரக்கமின்றியும் பகைவரொடு பொரும் கடுமறத்தைச் சிறந்த ஆண்டன்மை என்று சொல்வர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு (என்ப) - ஆயினும், அப்பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தவிடத்து இரங்கி அதை நீக்குதற் பொருட்டு அவர்க்கு உதவி செய்தலை, அவ்வாண்டன்மைக்குக் கூர்மையென்று சொல்வர் மறநூலார். இராவணன் முதல் நாட்போரில் தன்படையும் படைக்கலமுந் தேருமிழந்து தன்னந்தனியனாய் நின்றபோது. இராமன் இரங்கி "இன்றுபோய் நாளைப் படையொடுவா." என்று கூறிவிடுத்ததாகவுள்ள கம்ப விராமாயணச் செய்தி, ஊராண்மைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். "ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த பூளை யாயின கண்டனை, யின்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் (யுத்த 1218) இங்ஙனம் போர்க்களத்தில் தனித்து நின்ற பகைவர்க்குதவுதலும், புறங்கொடுத்தார் மீதும் அடைக்கலம் வேண்டினார் மீதும் படைக்கலம் தொடாமையுமான ஊராண்மையைத் 'தழிஞ்சி' என்னும் வஞ்சித்துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலை (3 : 20) கூறும். இரு கூற்றும் ஓரே சாராருடையதாகையால், 'என்ப' என்பது பின்னும் இயைந்தது. எஃகு ஆகுபெயர்.
கலைஞர் உரை:
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.
Translation
Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled.
Explanation
Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.
Transliteration
Ataldhakaiyum Aatralum Illeninum Thaanai Pataiththakaiyaal Paatu Perum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >