LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்!

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 ந் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சித் தலைவர் பொன்னையா அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16-ந் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும். அதன் பிறகு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்பட்டு, அத்திவரதரை குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும்.

ஆகஸ்ட் 17 -ந்  தேதி மாலையோ அல்லது இரவோ அத்திவரதர் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார். அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை.

அத்திவரதர் வைபவம் ஆகம விதிப்படி தான் நிறைவடையும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்தபடி, ஆகம விதிப்படி அர்ச்சகர்களால் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார்.

இன்னும் 4 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்களுக்கு தேவையான குடிநீர், அன்னதானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்க பந்தல், கார்பெட் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு அறைகளும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3000 பக்தர்கள் வரை தங்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 13 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.